சிவகாசி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை எதிரே 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை அருகே இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயன்றதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை அருகே இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயன்றதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொய் வழக்கில் கணவரை போலீசார் கைது செய்ததாக கூறி சத்யா என்பவர் உட்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஆகியோர் விழா முடிந்து சென்ற பின்னர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதலே தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளித்து 3 பேர் உயிரிழந்தனர். கடலூரில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனிடையே சிவகாசியில் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications