ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு: கதிராமங்கலத்தில் பெண்கள் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்!
கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி விலக வேண்டும் என்று கோரி, பெண்கள் மண் சோறு சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை: விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை கைவிட்டு ஓஎன்ஜிசி வெளியேற கோரி கதிராமங்கலம் மக்கள் மண் சோறு சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் எண்எய் குழாய் பதிப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அய்யனார் கோயில் தோப்பில் 16 நாள்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணெய் கிணறு திட்டத்தால் விவசாயம் அழிந்து சோற்றுக்குப் பதில் மண்ணைத்தான் உண்ண வேண்டும் என்பதை கூறும் விதமாக போராட்டத்தில் களத்தில் பெண்கள் நேற்று மண் சோறு சாப்பிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய நிலங்கள்
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ஓஎன்ஜிசி ஆய்வால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரும் செம்மண் நிறமாக மாறி உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லை
காவிரியில் போதிய தண்ணீரும் வருவதில்லை. மழையும் குறைந்து விட்ட நிலையில், நிலத்தடி நீரை நம்பி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓஎன்ஜிசியின் ஆய்வு பணிகள் தொடர்ந்தால் உண்பதற்கு உணவு இல்லாமல் மண்ணைதான் உண்ண வேண்டிய நிலை வரும் என்பதை உணர்த்தவே இந்த போராட்டம்.

இயற்கை பாதிக்கக் கூடாது
எனவே இயற்கையை பாதிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது. இதை உணர்த்தும் வகையில் தான் மண்சோறு சாப்பிடுகிறோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாலையில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சந்தித்து பேசினார்.

ஆர்ப்பாட்டம்
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாக தலைவர் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications