ஒரே நேரத்தில் சென்னை, கோவை, துபாயில் "மகளிர் தினம்" கொண்டாடி அசத்திய பெண்கள்
சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதன்முறையாக முகநூல் மூலம் இணைந்த பெண்கள் ஒரே நேரத்தில், தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் அமீரகத்தில் துபாயில் கொண்டாடி அசத்தியுள்ளனர்.

பெண்களுக்காக, பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு 'மகளிர் மட்டும்' என்னும் முகநூல் குழுமம், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் பெண்களை இணைக்கும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

பெண்களுக்கிடையிலான புது நட்புறவை ஏற்படுத்த, தங்களது தனித் திறமைகளை வெளிபடுத்த, தங்களுக்கிடையிலான கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, சமூக அக்கறையுடன் துவங்கப்பட்ட இந்தக் குழுமத்தில், தொடங்கிய ஐந்து மாதங்களுக்குள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

சின்னத்திரை - வெள்ளித்திரை நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வணிக பிரமுகர்கள் மட்டுமின்றி எல்லா துறைகளைச் சார்ந்த பெண்களும் இக்குழுமத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்,
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, முதன்முறையாக ஒரே நேரத்தில், தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் அமீரகத்தில் துபாய் போன்ற பெருநகரங்களில் தங்கள் குழும ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பாக நடத்தியுள்ளனர்.

சென்னையில் - ஷர்மிளா, கோவையில் - தீபிகா, உஷா, துபாயில் - வகிதா, பெனாசிர் ஆகியோரின் முழு முயற்சியால் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. மேலும் மஸ்கட், பெங்களூர், ஈரோடு போன்ற நகரங்களிலும் இதுபோன்று ஒன்றுகூடல் விரைவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, இக்குழுமத்தின் நிர்வாகி வகிதா பானு கூறியதாவது: எங்கள் குழுமத்தின் 1,000 மற்றும் 5,000 உறுப்பினர்கள் சேர்ந்தபோது உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சின்னத்திரை பிரபலம் ரம்யா ராமகிருஷ்ணன் மற்றும் பாடகி 'மன்மதராசா' புகழ் மாலதி ஆகியோரின் சிறப்பு நேரலை உரையாடல் (Live Chat) நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்..

இருவரும் மிக ஆவலுடன் கலந்து கொண்டது மட்டுமின்றி, இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். இதுமட்டுமின்றி உறுப்பினர்களை ஊக்குவிக்க பெண்களின் தனித்துவத்தை வெளிபடுத்தும் வகையில் சமையல், புகைப்பட மற்றும் பல்வேறு போட்டிகளை வாரந்தோறும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications