தேவக்கோட்டை பள்ளியில் கழிவறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி! வீடுகளில் கழிவறை கட்ட வலியுறுத்தல்
உலக கழிவறை தினத்தையொட்டி தேவக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு சுகாதரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு கழிவறை கோப்பை மூலமாக கழிவறை முக்கியத்துவம் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆசிரியர் ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.அப்போது, உலகில் கழிவறை இல்லாத டாப் -10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்கிற தகவலும், கழிப்பறை பயன்படுத்தாத நாடுகளில் முதல் 10-வது இடத்தில் முதலாவதாக இந்தியா உள்ளது என்கிற தகவலும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதில், மாணவர்கள் மத்தியில் கழிவறை கோப்பை காண்பிக்கப்பட்டு நேரடியாக கழிவறையின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.அனைத்து மக்களும் பல ஆயிரம் கொடுத்து செல் போன் வாங்குகின்றனர்.
ஆனால், துய்மையாக இருக்க வேண்டிய கழிவறை பயன்பாடு செல்போன் பயன்பாடு அளவில் பத்து சதவிகிதம் கூட இல்லை என்ற கவலை முன்வைக்கப்பட்டது. கழிவறை இருந்தும் பயன்படுத்தாத இடத்தில் உலக அளவில் முதலிடத்தில் இந்தியா உள்ளது கவலை தரக்கூடிய செய்தியாகும்.

இதனை மாற்றி அனைவருக்கும் கழிவறை அமைத்து கொடுத்து தனி நபர் சுத்தம்,வீடு சுத்தம் ,தெரு சுத்தம்,ஊர் சுத்தம்,நாடு சுத்தம் என துய்மை இந்தியாவை உருவாக்க சபதமேற்போம் என மாணவர்களிடம் சுத்தம் தொடர்பாக விரிவாக எடுத்து சொல்லப்பட்டது. தற்போதும், சிலரது வீடுகளில் இன்னும் கழிவறை கட்டப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
அவர்களிடமும் பெற்றோர்களிடம் சொல்லி விரைவில் கழிவறை கட்ட ஆவண செய்து சுகாதாரத்தை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. மாணவிகள் சின்னம்மாள்,பரமேஸ்வரி,சக்தி,காயத்ரி,ராஜேஸ்வரி,ஜெனிபர், மாணவர் செந்தில்,ஐயப்பன்,நந்தகுமார்,ஹரிஹரன்,ஈஸ்வரன்,கிஷோர்குமார்,பரத் ஆகியோர் துய்மை இந்தியா திட்டம் குறித்தும்,கழிவறைகள் தேவை குறித்தும் பேசினார்கள்.

இல்லங்கள் தோறும் கழிவறை சுகாதாரத்தின் அடிப்படை, நோய்கள் இல்லாதசுகாதாரத்தை காத்திட கழிவறை அவசியம் என்கிற தலைப்பிலான உறுதிமொழியும் மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications