ஏற்காட்டில் அனைத்து சாவடிகளிலும் வெப்கேமரா: 25 இடங்கள் பதற்றம் நிறைந்தவை
சேலம்: ஏற்காட்டில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 63 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்காடு தொகுதி தேர்தல் அதிகாரி மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் போலீசார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இதுவரை 3,19,00,000 ரூபாய் மதிப்புடைய தங்கம், வெள்ளி நகைகள், வேட்டி, சேலை, ஸ்வெட்டர் போன்ற துணி வகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான மகரபூசணம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஏற்காட்டில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 63 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழு ஒன்றுக்கு 3 அதிகாரிகள் வீதம், 189 பேர் 24 மணி நேரமும் ஏற்காடு தொகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.
இதுவரை ஏற்காடு தொகுதியில் 33 குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். வட்டாட்சியர் தலைமையில் 13 பறக்கும் படைகளும் தொடர் மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
வெப்கேமரா கண்காணிப்பு
ஏற்காடு தொகுதியிலுள்ள 290 வாக்குச் சாவடிகளிலும் வெப்கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முழுவதும் வெப்கேமரா மூலம் பதிவு செய்து ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.
பதற்றம் நிறைந்த பகுதிகள்
ஏற்காடு தொகுதியில் 25 இடங்கள் அதிக பதற்றம் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மகரபூசணம். 6 ஆய்வாளர்கள் தலைமையில் 24 மணி நேர ரோந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
22 வழக்குகள் பதிவு
போலீசார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இதுவரை 3,19,00,000 ரூபாய் மதிப்புடைய தங்கம், வெள்ளி நகைகள், வேட்டி, சேலை, ஸ்வெட்டர் போன்ற துணி வகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்த 210 மத்திய "ரிசர்வ்" போலீஸ் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்ததும் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் அதிகாரிகள் மகளிடம் நேரடியாக செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் மகரபூசணம் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications