ரொம்ப தப்பு.. தஞ்சாவூர் தேர் விபத்தை மகாமக சம்பவத்தோடு ஒப்பிடாதீங்க.. டிடிவி தினகரன் காட்டம்
தஞ்சாவூர்: ‛‛தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான சம்பவத்தை மகாமக விபத்தோடு ஒப்பீட்டு பேசுவது என்பது தவறாக முடியும்'' என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்ெசெயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் அப்பர்சாமி மடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை சதயவிழா நடைபெறும். இந்த ஆண்டு விழா நடந்தது.
தேர் திருவிழாவின்போது அதிகாலையில் எதிர்பாராதவிதமாக தேரின் உச்சிப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி உரசியது. இதில் ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி 11 பேர் இறந்தனர். 10க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிடிவி ஆறுதல்
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர். பிற கட்சியினர், சசிகலாவும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தனியார் கோயில் என கூறக்கூடாது
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛தமிழக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசக்கூடாது. விபத்து நடந்து விட்டது. அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று தான் கூற வேண்டுமே தவிர இது தனியார் கோயில் என்று கூறக்கூடாது. தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தான் இந்த கோயில் உள்ளது.

தவறாக முடியும்
சிலோனில் இல்லை. அரசாங்கம் பொறுப்பேற்று அந்த அந்த விபத்திற்கான காரணத்தைச் சரி செய்யவேண்டும். இது போல் தமிழகத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்தினை மகாமக விபத்தோடு ஒப்பிட்டு பேசி, அரசியல் ஆக்கினால் தவறாக முடியும்'' என்றார்.

விமர்சனம் ஏன்
அதாவது முன்னதாக இந்த சம்பவம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை பேசினார். கடந்த 1992ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் நிகழ்ந்த விபத்து குறித்து பேசினார். அப்போது அவர் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை தான் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications