தேனியில் வைகை ஆற்றுப்பாலத்தில் பைக்கை நிறுத்திய கள்ளக்காதல் ஜோடி.. இதுல ஹேப்பி டூர்.. இரவில் கொடுமை
தேனி: தேனி கள்ளக்காதல் ஜோடி, சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்துள்ளது.. கடந்த 2 நாட்களாகவே சுற்றித்திரிந்துவிட்டு, மீண்டும் தேனிக்கே திரும்பி வந்துள்ளது.. இந்த கள்ளக்காதலர்களின் விவகாரம் இருவரின் குடும்பத்துக்கும் தெரியவந்ததையடுத்து, இருவருமே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். இந்த ஜோடிக்கு பிறகு என்ன நடந்தது?
தேனி நகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ளது குன்னூர் கிராமம்... இங்குள்ள வைகை ஆறு ரயில்வே பாலத்துக்கு அடியில் ஒரு ஆணும், பெண்ணும் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக தேனி ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஆண், பெண் உடல்கள் ரயிலில் மோதி பல பாகங்களாக சிதறி கிடந்தன... இதில், இந்த ஆணுக்கு சுமார் 35 வயதிருக்கலாம் என தெரிகிறது.
போடி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்
போடி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 8.50 மணியளவில் தேனி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு கிளம்பியிருக்கிறது.. இந்த ரயில், குன்னூர் வைகையாற்று பாலம் அருகே இரவு 9 மணியளவில் கடப்பது வழக்கமாகும்.. அந்தவகையில், நேற்றுமுன்தினமும் இந்த ரயில், பாலத்தை கடந்து சென்றபோது, ஜோடி மீதும் மோதி இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
இரவு நேரம் என்பதால் யாருக்கும் இந்த சம்பவம் பற்றி தெரியவில்லை. நேற்று காலையில் விவசாயிகள், தங்களது வழக்கமான விவசாய பணிகளுக்காக சென்றபோதுதான், ஆணும், பெண்ணும் சிதைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதற்கு பிறகே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக் நம்பர் -விசாரணை
சிதறிக் கிடந்த அவர்களது உடலை மீட்டு, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையை துவக்கினார்கள.. இவர்களது உடல்கள் கிடந்த பகுதியிலேயே ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது... அதிலிருக்கும் நம்பரை வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் உயிரிழந்த நபர், திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
திருமணமானவருக்கு வந்த கள்ளக்காதல்
மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், சம்யுக்தா என்ற பெண்ணுடன், மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கம் தகாத உறவிலும் போய் முடிந்துள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவராம் சம்யுக்தா.. ஒருகட்டத்தில் இவர்களது காதல் விவகாரம், இருவரின் வீடுகளிலும் தெரிந்து, ரணகளம் வெடித்துள்ளது..
சுற்றித் திரிந்த ஜோடி
இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலர்கள் மணிகண்டனும், சம்யுக்தாவும் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.. கடந்த 2 நாட்களாகவே பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றிருக்கிறார்கள்.. இறுதியாகத்தான், குன்னூர் வைகையாற்று பாலத்துக்கு வந்திருக்கிறார்கள்.. அங்கே பாலம் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு, ரயில் தண்டவாளத்தில் இருவருமே தலை வைத்து படுத்து, தற்கொலை செய்துள்ளது, தற்போது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது,
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications