70 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் ...உபரிநீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை!
தேனி : வைகை அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியதையடுத்து, 7 மதகுகளின் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீர், தேனி திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த ஒரு வாரமாக கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால், அணையில் இருந்து வினாடிக்கு 1800 கன அடி வரை நீர் திறக்கப்பட்டது

நிரம்பி வழியும் வைகை அணை
வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மூல வைகை, வருஷநாடு வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை ஆற்றிலும், குரங்கணி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் கொட்டக்குடி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. முல்லைப் பெரியாறு, வைகை ஆறு மற்றும் கொட்டக்குடி ஆறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்தும் அதிகப்படியான நீர் வரத்தால், வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 30-ஆம் தேதி 66 அடியை எட்டியதையடுத்து, ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது

70 அடியை எட்டிய வைகை அணை
தற்போது அணைக்கு வினாடிக்கு 2,735 கன அடி நீர் வரத்து உள்ளதால் அணை வேகமாக நிரம்பி 70 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் 5,825 மில்லியன் கன அடி நீர் தேக்கப்பட்டுள்ளது. 7 பிரதான மதகுகளில் இருந்து 2,735 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக, பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், ஆற்றை கடக்கலோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள நீரால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலம் பாசனம் பெறும். மேலும், இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வாழ்வாதாரமாகவும் பயன்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications