சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே கூறுபோட்டு தின்னும் மர்ம நபர்.. நெல்லையில் பரபரப்பு
Recommended Video

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சுடுகாட்டில் எரியும் பிணத்தை அப்படியே வெட்டி கூறுபோட்டு தின்னும் மர்ம நபரை அப்பகுதியினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு அருகிலுள்ளது டி.ராமநாதபுரம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கனகசபாபதியின் மகன் முருகேஷன் (43).
இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். முருகேஷனுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதை பழக்கம் உண்டாம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மனைவி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சுடுகாட்டில் எரியும் பிணங்களை யாரோ ஒரு மர்ம நபர் தின்று செல்வதாக தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது.

தகனம்
இந்த நிலையில் கிராமத்து மக்களிடையே பெரும் பீதியும்,பரபரப்பும் உருவானது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். அவரை உறவினர்கள் சுடுகாட்டில் தகனம் செய்து விட்டு திரும்பி உள்ளனர்.

மூதாட்டியின் உடல்
இதனை தொடர்ந்து இறந்து போனவர்களின் உடலை சாப்பிடும் மர்ம நபர் யார் என தெரிய வேண்டும் என நினைத்த அப்பகுதியை சேர்ந்த சிலர் சம்பவத்தன்று இரவு சுடுகாட்டுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் காத்திருந்த வேளையில் பிணம் எரிந்து கொண்டிருந்த போது அங்கு கையில் அரிவாளோடு வந்த முருகேசன் எரிந்து கொண்டிருந்த மூதாட்டியின் சடலத்தை கம்பால் விலக்கி கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

விசாரணை
இதனைக்கண்ட மறைந்திருந்தவர்கள் குரல் எழுப்பி கற்களால் எரிந்துள்ளனர். பின்னர் அவர் ஓடியதாகவும் கூறுகின்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்து மக்கள் இது குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீஸார் மனித மாமிசம் சாப்பிட்ட முருகேசனை பிடித்து விசாரணை செய்தனர்.

மனநல மருத்துவமனை
அவரிடமிருந்து எந்த தகவலையும் பெற முடியாத நிலையில் ஊர்மக்களின் நிதி உதவியோடு தனியார் வாடகை வாகனத்தில் வாசுதேவநல்லூரில் இருந்து சென்னை கீழ்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு போலீஸார் பாதுகாப்போடு அனுப்பி வைத்துள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications