எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவதுதான் நம் கடமை.. அமித்ஷா முன்பு அண்ணாமலை பரபர பேச்சு
நெல்லை: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவது எங்கள் கடமை என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய அண்ணாமலை, மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துகொண்டிருக்கிறது என்றும், அடுத்த 8 மாதங்கள் பூத் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
நெல்லையில் இன்று பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். பல்வேறு பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

எடப்பாடியை முதல்வர் ஆக்க உழைக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களின் கடமை. அடுத்த ஆறு மாதங்கள் பூத் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
மேலும் அவர் கூறியதாவது:- நம்முடைய 12 ஆண்டுகால ஆட்சியின் சாதனை.. 4 ஆண்டு கால திமுக ஆட்சியின் வேதனை.. இவை இரண்டையும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.. இந்த பொறுப்பானது அரங்கத்தில் இருக்கக் கூடிய தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். கட்சி பூத்தில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் மட்டும் தான் இங்கு வந்திருக்கிறார்கள்.
பெரிய மாற்றம் வர உழைக்கனும்
நம்முடைய பொறுப்பை உணர்ந்து எல்லாரும் இங்க வந்துருக்கீங்க.. வரும் தேர்தலில் வெற்றி பெறும் வரை உழைக்க வேண்டும். முதல் மாநாடாக இந்த பூத் கமிட்டி மாநாடு இன்று நெல்லையில் நடைபெறுகிறது. இன்னும் 6 மாநாடுகள் நடக்கிறது. கடைசி மாநாட்டில் பிரதமர் மோடி, அமித்ஷா வருவார்கள். எல்லாரும் கடுமையாக உழைங்க.. ஒரு ஒரு வாக்கையும் சேகரித்து கொண்டுவாங்க.. பெரிய மாற்றத்திற்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக - பாஜக கூட்டணி
அதிமுக பாஜக இடையே கூட்டணி அமைந்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக யார் முதல்வர் வேட்பாளர்? யார் தலைமையில் கூட்டணி என பல கேள்விகள் எழுந்தன. எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என கூறி வந்தார். பாஜக தலைவர்களோ தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தான் கூட்டணி என்று பேசி வந்தனர். இதனால் யார் தலைமையில் கூட்டணி என்ற குழப்பத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது.
அமித்ஷா தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி தான் என்று பேசியதாகவும், இந்த விவகாரத்தில் அமித்ஷா சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன்.. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அண்ணாமலை பேசியது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், அமித்ஷா முன்பே அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என பேசியிருப்பது இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்!











Click it and Unblock the Notifications