"வாக்குச்சாவடி வழிகாட்டி" திட்டத்திற்காக.. திருநெல்வேலி ஆட்சியருக்கு விருது.. தேர்தல் ஆணையம் கவுரவம்
திருநெல்வேலி: கடந்த சட்டசபைத் தேர்தலில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறப்பாக பணியாற்றியதற்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் விருது வழங்கவுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கடந்த சட்டசபைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலராக செயலாற்றினார். அப்போது, அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்குச்சாவடி கண்காணிக்கப்பட்டது. இது மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 1,924 வாக்குச் சாவடிகள் உள்ளது. இந்த வாக்குச் சாவடிகள் அனைத்தும் ஜிஐஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் முறையாக கண்காணிக்கப்பட்டது.

தேர்தல்
தேர்தல் சமயத்தில் பணிகளை எளிதாக்கும் விதமாக வாக்காளர்கள் முதல் தேர்தலில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் வரை எளிதாக அனைவருக்கும் உதவும் வகையில் 'வாக்குச்சாவடி வழிகாட்டி' என்ற இணையதள அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தை திருநெல்வேலி மாவட்ட தேசிய தகவலியல் மையம் உருவாக்கியது.

இணையதளம்
இந்த இணையதளம் வாயிலாக அனைத்து வாக்காளர்களும் தங்கள் இருப்பிடத்திலிருந்து தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டிய வழிகளை தெளிவாக பார்த்து அறிய முடிந்தது. மேலும், 360 கோண பரிணாமத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளின் உட்புறத் தோற்றத் தையும் இணையதளம் வழியாக எளிதாக பார்க்க முடிந்தது.

கண்காணிப்பு
இந்த புதிய அமைப்பானது வாக்காளர்களுக்கு மட்டுமின்றி தேர்தல் பார்வையாளர்களுக்கும், நுண் பார்வையாளர்களுக்கும், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. அதேபோல், சமூக ஊடகங்களில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்தையும் கண்காணிக்கவும் புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.

ஆட்சியர்
கணினி தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேர்தல் சமயத்தில் வாக்குச் சாவடிகளை கண்காணித்ததற்கும், புதிய வசதிகளை கண்டறிந்து தேர்தல் சமயத்தில் முன்மாதிரியாக செயல்பட்டதற்காக, திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணுவுக்கு விருது வழங்கவிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். தேசிய வாக்காளர் தினத்தில் டெல்லியில் நடைபெறும் விழாவில் ஆட்சியர்விஷ்ணுவுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
-
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications