பயங்கர சத்தம்.. நெல்லை சர்ச் அருகே வெடித்த மர்மபொருள்.. போலீஸ் குவிப்பு- ஒரே பரபரப்பு.. என்னாச்சு?
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் குற்றால ரோட்டில் உள்ள சர்ச் ரோட்டின் அருகே நேற்று இரவு காரில் வந்த நபர்கள் மர்மபொருளை தூக்கி வீசிய நிலையில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த ஆண்டு அதிகாலை 4 மணியளவில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது. காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரில் இருந்த ஜமேஷா முபின் இறந்தார்.
இதுதொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சதிச்செயல்களாக இருக்கலாம் என்ற நோக்கத்தில் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சர்ச் அருகே வெடித்த மர்மபொருள்
இந்நிலையில் தான் திருநெல்வேலியில் உள்ள சர்ச் அருகே இரவில் மர்மபொருள் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு: திருநெல்வேலி டவுன் குற்றாலம் ரோட்டில் சிஎஸ்ஐ சர்ச் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சர்ச் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சர்ச் அருகே உள்ள பரோட்டோ கடையின் முன்பு மர்மபொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைகேட்டவுடன் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

போலீஸ்-தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
மேலும் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் மர்மபொருள் வெடித்ததாக கூறப்பட்ட இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு இருந்த சில பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

முன்விரோதம் காரணமா?
இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சர்ச் அருகே உள்ள பரோட்டா கடையில் அய்யப்பன் என்பவர் தனது உறவினருடன் நின்ற நிலையில் கார் ஒன்று சென்றதும், அந்த காரில் இருந்தவர்கள் வீசிய மர்மபொருள் தான் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இது முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பலத்த பாதுகாப்பு
இதற்கிடையே மர்மபொருள் வெடித்ததால் திருநெல்வேலியில் பரபரப்பபு தொற்றிக்கொண்டது. இதனால் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மர்மபொருள் வெடித்ததற்கான காரணம் என்ன? அது எப்படி தயாரிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. அதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications