செங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்!
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை - கொல்லம் இடையே 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை - கேரள மாநிலம் கொல்லம் இடையே இருந்த மீட்டர்பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணிகள் 2010ஆம் ஆண்டு தொடங்கின. இதனால் அந்தத் தடத்தில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் பணிகள் முடிந்து கடந்த 2018 ஆம் ஆண்டு தாம்பரம் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூலை 10ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்குப் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
அதன்பின்னர் இந்தாண்டு எர்ணாகுளம்-வேளாங்கண்ணி,வாராந்திர சிறப்பு ரயிலும்,தினமும் நெல்லை-பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும், தாம்பரம் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட ரயில் இந்தஆண்டுமுதல் தினசரி ரயிலாக அறிவிக்கப்பட்டு இயக்கபட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழகத்தின் கடைசி பகுதியாகவும்,கேரளமாநிலத்தின் நுழைவு பகுதியாகவும் இருக்கும் பகவதிபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலைத் தவிர எந்த ரயில்களும் நின்று செல்வதில்லை. இந்த ரயில் நிலையத்தையொட்டி புளியரை, தெற்குமேடு, புதூர், கேசவபுரம், கட்டளைக்குடியிருப்பு, தவணை, பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு என 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு சுமார் 25 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சார்ந்தவர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அரபு நாடுகளிலும் வசிப்பாதால் இங்கு ரயில்களை நிறுத்தி செல்ல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதிகளும் ஏற்பப்டுத்திடவேண்டும். கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்திட வேண்டும்.
பிளாட்பாரம் பணிகள் தொய்வு அடைந்தும், மழைக்காலங்களில் ரயில் மலைப்பாதையில் செல்லும் போது ஆபத்து நேரிட்டால் ரயில் பின்னோக்கி வந்து பாதுகாப்பாக மேட்டுப்பகுதியில் நிறுத்தும் தனிப்பாதை பனைகளும் இன்னும் முடிவடையாமல் உள்ளதாகவும் அவற்றையும் விரைந்து முடிக்க வேண்டும் என்கின்றனர் இந்த பகுதிமக்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications