அரசு வேலை வாங்கி தருவதாக முகநூலில் விளம்பரம்.. ரூ 25 லட்சம் மோசடி.. இளைஞர் கைது.. விசாரணையில் திடுக்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முகநூலில் விளம்பரம் செய்து 70-க்கும் மேற்பட்டோரிடம் ரூ 25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயநாதன். இவரது மகன் வேதாச்சலம் (26). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் சென்னை கே கே நகர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை கண்டார். இதையடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

தனது பெயர்
அப்போது வேதாச்சலத்திடம் பேசிய நபர் தான் சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி (35) என அறிமுகம் செய்து கொண்டார். ரூ 60 ஆயிரம் செலுத்தினால் கே கே நகரில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

பாலாஜி
இதை உண்மை என நம்பிய வேதாச்சலம், பாலாஜியின் வங்கி கணக்கிற்கு ரூ 54 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாச்சலத்தின் இ மெயில் முகவரியில் வேலையில் சேருவதற்கான ஆணையை அனுப்பி இருந்தார்.

பணி நியமன ஆணை
இதனால் மகிழ்ச்சி அடைந்த வேதாச்சலம் அந்த ஆணையை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். அப்போதுதான் தெரிந்தது இது ஒரு போலியான ஆர்டர் என்பது. மேலும் இந்த மருத்துவமனையிலிருந்து தாங்கள் எந்த ஒரு பணி நியமன கடிதத்தையும் அனுப்பவில்லை என தெரிவித்தனர்.

ஏமாற்றிய நபர்
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பது வேதாச்சலதத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பாலாஜிக்கு போன் செய்தார். ஆனால் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருவள்ளூரில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் செய்தார்.

54 பேர்
இதையடுத்து பாலாஜியை திருவள்ளூர் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை நேற்றைய தினம் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே வேலை வாங்கி தருவதாக 18 பேரிடமும், இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக 54 பேரிடமும் ரூ 25 லட்சம் பெற்றுக் கொண்டு பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
-
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications