அதிமுக தொண்டர்களுக்கு பன்னீர்செல்வத்தை பிடிக்கவில்லை.. "இதுதான் காரணம்.." காமராஜ் ஆவேசம்
திருவாரூர்: திமுகவை ஓ.பன்னீர் செல்வம் மறைமுகமாக ஆதரித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பில் இருக்கிறது. இதனிடையே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களிடம் தீவிரமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.
பெரிய ட்விஸ்ட்.. ஓபிஎஸ்ஸுக்கு உதவிய 7
சுற்றுப்பயணம்
இன்னும் சில நாட்களில் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும், மதுரையில் தொடங்கி தென் மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் இப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்த தொடங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கின் முடிவுக்கு பின், எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட அதிமுகவின் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய, நகர செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டார்.
தீர்மானம்
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் சமூக விரோதச் செயல்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்கத் தவறிய திமுக ஆட்சியை கண்டிப்பது, சொத்துவரி, வீட்டு வரி, பால், மின் கட்டணம் உயர்வு ஆகியவற்றை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி, அம்மா மினி கிளினிக் போன்ற ரத்துசெய்யப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காமராஜ் பேச்சு
முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில், அதிமுகவிற்கு தேய்மானம் இருக்கிறது என்று யாராலும் சொல்லமுடியுமா? அதிமுக வளர்பிறை வளர்ந்து கொண்டே இருக்க கூடிய இயக்கம். அதிமுகவை எதிர்த்து தேர்தலில் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த திமுகவை, எடப்பாடி பழனிசாமி எதிர்த்து வருகிறார். ஆனால் ஓபிஎஸ் மறைமுகமாக திமுகவை ஆதரித்து வருகிறார். இதற்காக தான் அதிமுக தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வம் மீது கோபப்படுகிறார்கள். இந்த கோபத்தில் நியாயம் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.