திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு.. விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!
திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
திருவாரூர்: திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். ஏற்கனவே டி. ராஜா இந்த இடைத்தேர்தலுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தார்.
கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. இந்த சேதத்தில் இருந்து இப்போதுதான் மக்கள் மீண்டு வருகிறார்கள். மீட்பு பணிகள் இப்போதுதான் நடந்து வருகிறது.
இப்போது தேர்தல் நடந்தால் மீட்பு பணிகள் பாதிப்படையும். மக்கள் வாக்களிப்பது குறையும். அதேபோல் தேர்தல் முடிவுகளும் பாதிக்கப்படும். அதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
தற்போது இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க போவதாக கூறியுள்ளனர். அடுத்த வாரம் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
மனு விரைவாக விசாரிக்கப்படும், அனைத்து மனுக்கள் மீதான விசாரணையும் விரைவில் நடக்கும். தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் இந்த மனுவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது.
இதனால் திருவாரூர் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் பெரிய சந்தேகமும், பரபரப்பும் எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications