திருப்பதி மலையில் புதையலா.. 80 அடிக்கு சுரங்கப்பாதை.. ஒரு வருடமாக போட்ட பலே ஸ்கெட்ச்.. உறைந்த போலீஸ்
சேஷாசலம் மலையில் 80 அடி சுரங்கப்பாதை அமைத்த 6 பேர் கைதானார்கள்
திருப்பதி: திருப்பதி மலையில் புதையல் இருக்கிறது என்று ஒரு சாமியார் சொன்னாராம்.. இதை கேட்டு ஒரு வருஷமாக ஆட்களை வைத்து, சுரங்கப்பாதை தோண்டி உள்ளார் ஒருவர்..!
ஆந்திர மாநிலம் திருப்பதி எம்ஆர் பள்ளியை சேர்ந்தவர் மக்கு நாயுடு... இவர் ஒரு மேஸ்திரி.. அந்த பகுதியிலேயே சில ஆட்களை கூலிக்கு வைத்து வேலை பார்த்து வருகிறார்.
மேஸ்திரிக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்துள்ளது.. அத்துடன் பணம் சேர்க்கும் பேராசையும் அதிகமாக இருந்துள்ளது.. எனவே, பணம் சேர வேண்டும் என்று நெல்லூரை சேர்ந்த ராமையா என்ற சாமியாரை சென்று சந்தித்துள்ளார்.

சுரங்கப்பாதை
அந்த சாமியார், திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாசல மலையில், ஒரு பெரிய புதையல் இருக்கிறது, 120 அடி தூரத்துக்கு சுரங்கப்பாதை தோண்டினால், 2 ரூம் இருக்கும்.. அந்த 2 ரூம்களிலும் வைரமும், வைடூரியங்களும் கொட்டி கிடக்கும் என்றும் சொல்லி உள்ளார்.. சாமியாரின் பேச்சை கேட்டு, மேஸ்திரியும், புதையலை எடுக்க முடிவு செய்தார்.

சொந்த மாநிலம்
அதற்காக சாமியார் சொன்னதுபோலவே, சுரங்கம் தோண்டினார்.. ஆனால் தன் ஊரை சேர்ந்தவர்களையே வேலைக்கு வைத்தால், விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்று நினைத்து, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்த கூலியாட்களை வைத்து சுரங்கப்பாதை தோண்ட ஆரம்பித்தார்..

கர்நாடகம்
அதேசமயம், இந்த கூலியாட்களையும் ஒரு மாசத்தில் மேஸ்திரி மாற்றிவிடுவாராம்.. மீண்டும் வேறு ஒரு டீமை உள்ளே இறக்குவார்களாம்.. இப்படியே ஒரு வருஷமாக சுரங்கம் தோண்டி வந்துள்ளார்.. கிட்டத்தட்ட 80 அடிக்கு தோண்டி தோண்டியபோது பெரிய பாறை ஒன்று தட்டுப்பட்டுள்ளது.. இந்த பாறையை கூலியாட்களால் அகற்றவே முடியவில்லை.. அதனால், கர்நாடகவை சேர்ந்த 5 திறமையான 5 கூலியாட்களை 2 நாளைக்கு முன்பு அழைத்து வந்துள்ளார்..

கைது
அப்போதுதான் பொதுமக்கள் இதை கவனித்துள்ளனர்.. உடனடியாக திருமலை போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர்.. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மேஸ்திரியையும், கர்நாடகாவில் இருந்து வந்த 5 கூலி தொழிலாளர்களையும் கைது செய்தனர்.. பிறகு அந்த சுரங்கத்தை நேரடியாக சென்று பார்வையிட்டபோதுதான் 80 அடி சுரங்கப்பாதை தென்பட்டுள்ளது..

சேஷாசலம்
இப்போது 6 பேரும் ஜெயிலில் உள்ளனர்.. சேஷாசலம் மலையில் ஏற்கனவே போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.. இவர்களை மீறி எப்படி ஒருவருஷமாக சுரங்கப்பாதை அமைக்க முடிந்தது? 80 அடிக்கு பாதை தோண்ட முடிந்தது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது? இந்த சுரங்கப்பாதை விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications