Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமலை திருப்பதியில் திகைத்த மக்கள்.. அதைவிடுங்க, தேவஸ்தானம் தரும் தித்திப்பு நியூஸ்.. ஆஹாஹா லட்டு

Subscribe to Oneindia Tamil

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இந்த நடவடிக்கையானது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. இதற்கு நடுவில், போலீஸ்காரர் ஒருவர் செய்த செயலை கண்டு, பக்தர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. என்ன நடக்கிறது திருப்பதியில்?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த லட்டு ஏழுமலையான் கோயிலிலேயே 3 வகைகளில் தயார் செய்யப்படுகிறது.

tirupati laddu tirumala tirupati devasthanam laddu

லட்டு ஸ்பெஷல்: இதில் 2வது லட்டு 175 கிராம் எடையிலும் தயாராகிறது. இந்த 2வது லட்டுதான், பக்தர்களால் விரும்பப்படும் பெரிய லட்டு ஆகும். இது ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும்

லட்டுக்களை பெறுவதற்காகவே தேவஸ்தானத்தின் சார்பில் பிரத்யேகமாக கவுன்டர்கள் உள்ளன.. ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய கட்டணம் செலுத்தி பக்தர்கள் லட்டு வாங்கி செல்வது வழக்கமாக இருந்த நிலையில், ஒரு ஆதார் கார்டுக்கு 2 லட்டுகளை வாங்கி செல்லலாம் என்றும், சாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

லட்டு கவுண்ட்டர்: தற்போதுவரை ஆதார் எண் அடிப்படையில் லட்டுகள் வழங்கப்பட்டு வந்தாலும், லட்டு கவுண்டர்களில் பிரத்யேக இயந்திரங்கள் வைக்கப்பட்டு, ஸ்கேனிங் மூலம், பக்தர்களுக்கு லட்டு வழங்கப்போகிறார்களாம்.. இதற்காக பிரசாத கவுண்டரில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன..

இயந்திரம் மூலம் லட்டுகளை விரைந்து பெற முடியும் என்றும், இதன்காரணமாக நீண்ட நேரம் கியூவில் நிற்க வேண்டிய அவசியமில்லை, புரோக்கர்களின் தொல்லையும் குறையும் என்றும் தேவஸ்தானம் நம்புகிறது. எனவே, இனிமேல் அதிக லட்டுகள் வேண்டுமானால், கவுன்டர்களில் இருந்தே வாங்க வேண்டும். இப்போதைக்கு 6 கவுன்டர்களில் மட்டுமே ஸ்கேனிங் மிஷின்கள் உள்ள நிலையில், இதற்கான வரவேற்பை பொறுத்து, அனைத்து கவுண்டர்களிலும் நிறுவ தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாம்.

tirupati laddu tirumala tirupati devasthanam laddu

ஆன்லைன்: இதனிடையே, இன்னொரு திருப்பதி விவகாரம் ஒன்று இணையத்தில் சலசலப்பை தந்து கொண்டிருக்கிறது.. அதாவது, ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், ஆன்லைனில் ரம்மி விளையாடியிருக்கிறார்..

பிரம்மோற்சவம் நடந்து வருவதால், பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அப்படி பாதுகாப்பு பணிக்கு வந்த ஒரு போலீஸ்காரர், டியூட்டியை பார்க்காமல், தன்னுடைய செல்போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார்.

பரபரப்பு: இதைப்பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.. போலீஸ்காரர் ரம்மி விளையாடுவதை, சில பக்தர்கள் வீடியோவும் எடுத்து இணையத்தில் பதிவிட்டு விட்டனர்.. இந்த வீடியோவும் பரபரப்பாக இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், தினம் தினம் இதுபோன்ற ஏதாவது ஒரு நிகழ்வு, திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்தை பெற்றுவிடுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+