இனி ஏழுமலையான் தரிசனமும் கோவிந்தா கோவிந்தா!.. பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்தது ஆந்திர அரசு!
அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தற்காலிகமாக ஆந்திர மாநில அரசு தடை விதித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பிரம்மோற்சவம், வைகுந்த ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு, தொடர் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை எட்டும்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 3 பேர் பலியாகிவிட்டனர்.
இதையடுத்து மக்கள் கூடும் சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், புராதன சின்னங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அது போல் தமிழகத்திலும் தஞ்சை பெரிய கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலை பொருத்தவரை கொரோனா பரவலை தடுக்க மக்களை காத்திருப்பு அறைகளில் வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு தேவஸ்தான நிர்வாகம் அனுப்பியது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வர தற்காலிகமாக தடை விதித்துள்ளது ஆந்திர அரசு. எத்தனை நாட்களுக்கு என்பது குறித்து எதையும் குறிப்பிடவில்லை.
எனினும் தற்போது கோயிலுக்குள் இருப்பவர்களுக்கு மட்டும் தரிசனம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதி வரை 300ரூ கொடுத்து ஏற்கெனவே ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படுமா என்பது குறித்து நிர்வாகம் கூறவில்லை. அது போல் அன்றாட சேவைகளுக்கு பணம் கட்டியோரின் நிலையும் தெரியவில்லை. எனவே இனி ஏழுமலையான் தரிசனமும் கோவிந்தா கோவிந்தா!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications