வரதனுக்கு "வரம் தரும் கைகள்.." ஏழுமலையானுக்கு பக்தர் நன்கொடை.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைர ஆபரணத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
Recommended Video
வைரம் மாணிக்கம் மற்றும் பவளத்தில் செய்யப்பட்ட 5.3 கிலோ எடையுள்ள கை உருவம் கொண்ட ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
வெங்கடேச பெருமாளை தரிசித்த பிறகு 3 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கைகளை பெயர் சொல்ல விரும்பாத அந்த பக்தர் வழங்கி உள்ளார்.

திருமலையான் கோயில்
பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரிய திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உண்டியல் காணிக்கையும் நாள்தோறும் இங்கு கோடிக்கணக்கில் பெறப்படும். கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனத்தில் வழிபட விரும்பும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன அனுமதி அட்டை தற்போது ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டும் திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் செல்வது வழக்கம்.

திருப்பதி தேவஸ்தான சொத்து
இந்நிலையில் திருப்பதி திருமலையான் தேவஸ்தானத்தின் சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டன. தேவஸ்தானத்துக்கு சொந்தமான 1,128 சொத்துக்களில் 8 ஆயிரத்து 88 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 1974-ம் ஆண்டு முதல் 2014 வரை 141 இடங்களில் உள்ள சொத்துகளில் 335.23 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 61 இடங்களில் 293.02 ஏக்கர் விவசாய நிலமும், 80 இடங்களில் விவசாய நிலமல்லாத 42.21 ஏக்கர் நிலங்களும் ரூ.6 கோடியே 13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி 987 இடங்களில் 7753.6 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 172 இடங்களில் உள்ள நிலம் வேளாண் சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது. 1792.39 ஏக்கர் விவசாய நிலமும், 5,961 விவசாயமல்லாத நிலமும் திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

5.3 கிலோ நகைகள் நன்கொடை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பலர் தங்களின் சொத்துகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இவை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து பாதுகாப்புத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்துவிட்டு திருமலையான கோயிலுக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள "வரம் தரும் கைகள்" ஆபரணத்தை நன்கொடையாக வழங்கினார்.

நன்கொடை தந்த பக்தர் மகிழ்ச்சி
இந்த ஆபரணக் கைகள் 5.3 கிலோ எடையுள்ளது. இதில் வைரம், மாணிக்கம் மற்றும் பவளக் கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைகளை கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்து வழங்கி உள்ளார். இதை அன்போடு பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகிகள் இந்த தங்க கைகள் மிக முக்கியமான உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அந்த பக்தர் மகிழ்ச்சி அடைந்தார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications