Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரதனுக்கு "வரம் தரும் கைகள்.." ஏழுமலையானுக்கு பக்தர் நன்கொடை.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 3 கோடி ரூபாய் மதிப்பிலான வைர ஆபரணத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

Recommended Video

    வரதனுக்கு வரம் தரும் கைகள்.. ஏழுமலையானுக்கு பக்தர் நன்கொடை.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    வைரம் மாணிக்கம் மற்றும் பவளத்தில் செய்யப்பட்ட 5.3 கிலோ எடையுள்ள கை உருவம் கொண்ட ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி உள்ளார்.

    வெங்கடேச பெருமாளை தரிசித்த பிறகு 3 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கைகளை பெயர் சொல்ல விரும்பாத அந்த பக்தர் வழங்கி உள்ளார்.

    திருமலையான் கோயில்

    திருமலையான் கோயில்

    பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரிய திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உண்டியல் காணிக்கையும் நாள்தோறும் இங்கு கோடிக்கணக்கில் பெறப்படும். கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனத்தில் வழிபட விரும்பும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன அனுமதி அட்டை தற்போது ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டும் திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் செல்வது வழக்கம்.

    திருப்பதி தேவஸ்தான சொத்து

    திருப்பதி தேவஸ்தான சொத்து

    இந்நிலையில் திருப்பதி திருமலையான் தேவஸ்தானத்தின் சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டன. தேவஸ்தானத்துக்கு சொந்தமான 1,128 சொத்துக்களில் 8 ஆயிரத்து 88 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 1974-ம் ஆண்டு முதல் 2014 வரை 141 இடங்களில் உள்ள சொத்துகளில் 335.23 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 61 இடங்களில் 293.02 ஏக்கர் விவசாய நிலமும், 80 இடங்களில் விவசாய நிலமல்லாத 42.21 ஏக்கர் நிலங்களும் ரூ.6 கோடியே 13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி 987 இடங்களில் 7753.6 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 172 இடங்களில் உள்ள நிலம் வேளாண் சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது. 1792.39 ஏக்கர் விவசாய நிலமும், 5,961 விவசாயமல்லாத நிலமும் திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    5.3 கிலோ நகைகள் நன்கொடை

    5.3 கிலோ நகைகள் நன்கொடை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பலர் தங்களின் சொத்துகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இவை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து பாதுகாப்புத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்துவிட்டு திருமலையான கோயிலுக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள "வரம் தரும் கைகள்" ஆபரணத்தை நன்கொடையாக வழங்கினார்.

    நன்கொடை தந்த பக்தர் மகிழ்ச்சி

    நன்கொடை தந்த பக்தர் மகிழ்ச்சி

    இந்த ஆபரணக் கைகள் 5.3 கிலோ எடையுள்ளது. இதில் வைரம், மாணிக்கம் மற்றும் பவளக் கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைகளை கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியை சந்தித்து வழங்கி உள்ளார். இதை அன்போடு பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகிகள் இந்த தங்க கைகள் மிக முக்கியமான உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அந்த பக்தர் மகிழ்ச்சி அடைந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+