500 ரூபாய் நோட்டு! தட்டிலே வேண்டாம் உண்டியல்லேயே போடுங்க! ஓபிஎஸ்ஸிடம் சொன்ன திருப்பதி புரோகிதர்!
திருப்பதி : திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புரோகிதரின் தட்டில் 500 ரூபாய் நோட்டை போட்ட நிலையில், வேண்டாம் உண்டியலிலேயே போட்டுவிடுங்கள் என சைகை காட்டியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பிறராக அதிமுகவில் ஒற்றை தலைமையாக, நிரந்தர பொதுச் செயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற பரபரப்பு அதிமுகவின் நீண்ட காலமாகவே தொற்றிக் கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை தான் ஓங்கி இருக்கிறது.
இதனிடைய கட்சியில் நீண்ட காலமாக பயணிக்கும் ஓ.பன்னீர்செல்வமும் நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என தனது பலத்தை நிரூபிக்க போராடி வருகிறார். இதனால் அதிமுகவில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்
பரபரப்பான அரசியல் சூழலில் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் ஏன் வங்கி வரை அதிமுக நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு சட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கோவில் கோவிலாக சென்று வருகிறார் ஓ பன்னீர்செல்வம். ஆன்மீக நாட்டம் கொண்டவரான அவர் மாதத்தில் ஒருமுறையாவது பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியின் மறைவை முன்னிட்டு காசிக்குச் சென்று திதி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் அதன் பிறகு ராமேஸ்வரம் கோவில் சுவாமி தரிசனம் செய்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார் ஏற்கனவே திருப்பதி திருமலையில் முப்பது மணி நேரம் கழித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது.

சுவாமி தரிசனம்
நேற்று இரவு புதுச்சேரி பாஜக துணை முதல்வர் நமச்சிவாயம் உள்ளிட்டருடன் ஒரே விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த ஓபிஎஸ் இன்று காலை சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அவரை கோவில் நிர்வாகத்தினர் உரிய மரியாதையோடு வரவேற்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர். மூலவர் ஏழுமலையான் தரிசித்த பிறகு உப கோவில்களில் ஓ பன்னீர்செல்வம் மனம் உருக பிரார்த்தனை செய்தார். அப்போது கோவில் புரோகிதர் ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபாரதனை காட்டினார்.

சைகை செய்த புரோகிதர்
அப்போது ஓ பன்னீர்செல்வம் 500 ரூபாய் நோட்டு ஒன்றை புரோகிதரின் தீபத்தட்டில் வைத்தார். அதனை எடுக்குமாறு கூறிய புரோகிதர் உண்டியலில் போட்டு விடுமாறு சைகை செய்தார். இதை அடுத்து வைத்த 500 ரூபாய் நோட்டை மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து ஏழுமலையான் கோவில் பிரகாரங்களில் வளம் வந்த ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பக்தர்களும் ஆந்திர பக்தர்களும் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு சிரித்துக் கொண்டே ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்த நிலையில் பலரும் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications