திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகைபிரம்மோற்சவம் - ஏகாந்த தரிசனம்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் 11ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ஆம் தேதி காலையில் கொடியேற்ற வைபவம் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல், கோவில் வளாகத்திலேயே ஏகாந்தமாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைணவ பக்தர்கள் போற்றி வணங்கும் முக்கிய திருத்தலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு தினசரியும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி மலை மீது எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதே போல திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவின் தொடக்கமாக வருகிற 11ஆம் தேதி காலையில் கொடியேற்ற வைபவம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அன்று இரவில் பத்மாவதி தாயார் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.
12ஆம் தேதி காலையில் தாயார் பெரிய சேஷ வாகனத்திலும், அன்று இரவு அன்னப்பறவை வாகனத்திலும், 13ஆம் தேதி காலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும், இரவில் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளுகிறார். அதே போல் தொடர்ந்து காலை மற்றும் இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்.

தற்போது கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தாலும், நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல், கோவில் வளாகத்திலேயே ஏகாந்தமாக பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று பத்மாவதி தாயார் ஆலயத்தில் ஆழ்வார் திருமஞ்சன வைபவம் நடைபெற்றது. முன்னதாக, கொடி மரம், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள், கோவிலின் மேற்கூரைகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், கிச்சிலிகடா உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கலந்த புனித நீர் ஆலயம் முழுவதும் தெளிக்கப்பட்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
நடப்பு ஆண்டில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக நாட்டிலுள்ள பெரும்பாலான கோவில்களில் வழக்கமாக நடைபெறும் திருவிழாக்கள் எல்லாமே பக்தர்கள் இல்லாமலேயே நடைபெற்றது. அதற்கு மாற்று ஏற்பாடாக விழாவினை இணைய தளத்தின் வழியாக ஆன்லைனில் கண்டு தரிசித்தனர். ஏழு மாதங்களுக்கு பிறகு மலையப்பசுவாமி சில தினங்களுக்கு முன்பு மாட வீதிகளில் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications