பஸ் ஸ்டாண்டில் மது குடித்தவரை தட்டி கேட்டவர் படுகொலை.. உடுமலை அருகே பயங்கரம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, பேருந்து நிறுத்தம் பகுதியில் மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஆதவற்ற முதியவரை, இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளபாளையம் ஊராட்சியை அடுத்துள்ளது கொங்கலக்குறிச்சி என்ற கிராமம். இந்த கொங்கலக்குறிச்சி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தும் பகுதியில், சுமார் 60 வயது வரை மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் ஒருவர் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், கொங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வீரமலை என்பவரது மகன் பழனியப்பன் என்பவர், அங்குள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கிக்கொண்டு, மது அருந்துவதற்காக, முதியவர் தங்கியிருந்த பேருந்து நிறுத்தத்துக்குள் இரவில், மது பாட்டிலுடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த முதியவர், இங்கு அமர்ந்து மது அருந்த வேண்டாம் என்றும், வெளியே சென்று மது அருந்துங்கள் என்றும் பழனியப்பனிடம் கூறியதாக தெரிகிறது.
பேருந்து நிறுத்தும் பகுதியில் தன்னை மது அருந்தக்கூடாது என கூறியதால் ஆத்திரம் அடைந்த பழனியப்பன், அருகில் கிடந்த கம்பியை எடுத்து முதியவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த முதியவர் கீழே விழுந்துள்ளார். எனினும் அதனை கண்டுகொள்ளாமல், பழனியப்பன், மது அருந்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் காலை பேருந்து நிறுத்தத்திற்குச் சென்ற பொதுமக்கள், அங்கு இறந்த நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், இறந்த முதியவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், தளி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் சம்பவ பகுதிக்குச் சென்ற உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ஆதரவற்ற முதியவரை தாக்கி கொலை செய்த கூலித்தொழிலாளி பழனியப்பனை கைது செய்தனர்.
பேருந்து நிறுத்தம் பகுதியில் மது குடிக்க வேண்டாம் என கூறிய ஆதரவற்ற முதியவர், இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம், உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications