திருப்பூரில் குபீர்னு ஏறிய மாட்டிறைச்சி விலை.. கிலோ எவ்ளோ பாருங்க.. பீப் ஸ்ட்ரைக் தந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் உள்ள மாட்டிறைச்சி கடைகள் அனைத்தும் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, ஒட்டுமொத்தமாக கடைகளை அடைத்துள்ளனர். இதனால் மாட்டிறைச்சி விற்பனை மட்டுமின்றி, திருப்பூரின் புகழ்பெற்ற மாட்டிறைச்சி பிரியாணி விற்பனையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? மாட்டிறைச்சி வியாபாரிகள் சொல்லும் கண்ணீர் கோரிக்கை என்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

திருப்பூர் என்றாலே பனியன் நிறுவனங்களும், பரபரப்பான தொழிலாளர்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்று ஒட்டுமொத்த திருப்பூரையும், குறிப்பாக அசைவ பிரியர்களை அதிர வைக்கும் வகையில் ஒரு முக்கிய இன்று சம்பவம் நடந்துள்ளது.

Beef prices

திருப்பூர் மாட்டிறைச்சி விலை

திருப்பூர் நொய்யல் வீதியில் 20-க்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி கடைகள் மிக பிஸியாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த சில மாதங்களாகவே மாடுகளின் வரத்து சந்தைகளில் வெகுவாக குறைந்துவிட்டதாம்.

அதேசமயம், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு அதிக அளவில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதால், இறைச்சிக்கான மாடுகளின் விலை ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை ஒரேயடியாக உயர்ந்துவிட்டது.. இந்த கடுமையான விலை உயர்வு காரணமாக வியாபாரிகள் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வந்துள்ளனர். இந்த இக்கட்டான நிலையை பொதுமக்களுக்கு புரிய வைக்கவே, ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தை இன்று அறிவித்து, நடத்தி வருகிறார்கள்.

விலை உயர்வு எகிறியது எப்படி

இதுகுறித்து மாட்டிறைச்சி வியாபாரி சிக்கந்தர் பாஷா செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்துதான் மாடுகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால் சந்தைகளுக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது.

6 மாதங்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய மாடு, தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலையை உயர்த்தாமல் எங்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என வேதனையோடு தெரிவித்துள்ளார்.

கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாட்டிறைச்சி விலையும் உயர்ந்துள்ளன.. இதுவரை கிலோ ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சி (எலும்பு கறி), ரூ.400-க்கும், ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட தனிக்கறி (எலும்பில்லா இறைச்சி) இனி ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரியாணி பிரியர்களுக்கு அடுத்த ஷாக்

கறி விலை உயர்வு ஒருபுறம் இருக்க, இதன் நேரடி தாக்கம் பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது... இன்று ஸ்ட்ரைக் என்பதால், திருப்பூர் கிழக்கு வீதியில் செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி பிரியாணி கடைகளில் இன்று பிரியாணி சமைக்கப்படவில்லை.

இன்று ஸ்ட்ரைக் முடிந்து நாளை முதல் மீண்டும் விற்பனை தொடங்கப்பட்டாலும், மாட்டிறைச்சி விலை உயர்வை கருத்தில் கொண்டு பிரியாணி, வறுவல், சில்லி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து சங்க அளவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இனி நைட் பர்ச்சேஸ் கிடையாதா

நாளை முதல் வழக்கம்போல் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், வியாபாரிகள் ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். இனிமேல் இரவு நேர விற்பனை முற்றிலுமாக குறைக்கப்பட்டு, மாலை 7 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்று வியாபாரிகள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் விலை உயர்வு மற்றும் நேரக் கட்டுப்பாடு காரணமாக திருப்பூர் பொதுமக்கள் மற்றும் உணவகத் துறையினர் இடையே பெரும் கவலையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக பிரியாணி விலையும் எகிறப்போவது மட்டும் நிச்சயம் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+