"50,000+".. 27-ம் தேதி ஸ்டாலின் வீட்டுக்கு போகப்போகிறார்.. அடுத்து எடப்பாடிதான்: பொள்ளாச்சி ஜெயராமன்
இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றி பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்
திருப்பூர்: விரைவில் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று அதிமுகவின் மூத்த தலைவர் பொள்ளாசி ஜெயராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. நடக்க போகும் இடைத்தேர்தலில் வெல்வது அதிமுகதான் என்றும் உறுதியாக சொல்கிறார்.
விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. திமுக கட்சியானது, தன்னுடைய கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்குவதாக தெரிவித்து உள்ளது..
எனினும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக இப்போதே களத்தில் தீவிரமாக குதித்துவிட்டது..

முகாம் சீனியர்கள்
குறிப்பாக, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சருமான முத்துச்சாமி மற்றும் நகராட்சி துறை அமைச்சர் கேஎன் நேரு ஆகியோர் நிர்வாகிகளுடன் வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஈரோடு பெரியார் நகரில் இருந்து, அதிரடி பிரச்சாரம் ஆரம்பமாகி உள்ளது. இனி அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் முகாமிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஸ்க்
அதேபோல, இலை கிடைக்காத விவகாரத்தில், கூட்டணிக்கே தொகுதியை ஒதுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவே நேரடியாக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கு நடுவில் ஓபிஎஸ்ஸும் களமிறங்குகிறார்.. மநீம, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், இப்படி எல்லாருமே இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள்.. பாஜகவும் தன்பங்குக்கு வேகத்தை கூட்டி வருகிறது.. அதனால், இந்த முறை, இடைத்தேர்தல் களத்தில் 5 முனை போட்டி எழலாம் என்று தெரிகிறது.. இதில் மற்ற கட்சிகளை காட்டிலும், அதிக ரிஸ்க் எடுப்பது எடப்பாடி பழனிசாமியே என்கிறார்கள்.

துணிச்சல் - பலம்
வழக்கம்போல் இந்த முடிவையும் துணிச்சலாக எடப்பாடி எடுத்துள்ளதாக சொல்லப்பட்டாலும், சின்னம் இல்லாத நிலைமையில், உட்கட்சி பூசலில், பாஜகவுடன் தற்சமயம் நல்லிணக்கம் இல்லாத சூழலில், திமுகவின் அசுர பலத்திற்கு நடுவில், எடப்பாடி பழனிசாமி களமிறங்குவதால், நெருக்கடிகளும், சிக்கல்களும் கூடியுள்ளதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராவார் என்ற நம்பிக்கையுடன் சொல்கிறார் மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்.

ஜெயலலிதா
திருப்பூர் சூசையாபுரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகரும், எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியபோது, "எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பலதரப்பட்ட மக்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் நான்கரை வருட காலம் நிறைவேற்றி தமிழக மக்களுடைய நெஞ்சத்தில் இடம் பிடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் மறுபடிம் முதல்வராக வருவார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications