இயேசுவே உலக மக்களை காப்பாற்று.. தேசிய கொடியில் எழுதி ஏற்றிய ஆசிரியர்! கம்பி எண்ண வைத்த போலீஸ்
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனது வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை சில வார்த்தைகளை எழுதியதோடு, தேசிய கொடியை அவமதித்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனியார் பள்ளி ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
Recommended Video
இந்திய சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய, மாநில அரசுகள் சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கப்பட்ட நிலையில், வழக்காம உற்சாகத்தோடு நேற்று கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தேசிய கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில், இந்தியா முழுவதிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

தேசியக் கொடி
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனது வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை சில வார்த்தைகளை எழுதியதோடு, தேசிய கொடியை அவமதித்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனியார் பள்ளி ஆசிரியரை கைது செய்துள்ளனர். தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த எபின் 36 இவர் தாராபுரம் பிரபல பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

திருப்பூரில் பிரச்சினை
நேற்று இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றி இந்தியா ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும் மரியாதை செலுத்தப்பட்டது.

சர்ச்சை வசனம்
அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசியக் கொடியில் இயேசுவே உலக மக்களை காப்பாற்று என்ற வாசகம் எழுதிய தேசிய கொடியை மேல் கோரையில் கட்டி உள்ளார் .இது குறித்து அப்பகுதி மக்கள் தாராபுரம் போலீசில் தகவல் கொடுத்தனர்.

அதிரடி கைது
தகவலின் பெயரில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது எபின் 36 தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரிந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications