குடிபோதையில் பஸ்சை மறித்து 'குடிமகன்' ரகளை.. தடுக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து!
திருச்சி: திருச்சி அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தினார். இதில் இரண்டு பேரும் காயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம். சோமரசன்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார்(45)
இவர் மதுபோதையில் சோமரசன்பேட்டை அடுத்துள்ள சுண்ணாம்புகாரப்பட்டி சாலை நடுவில் மதுபோதையில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி தீ வைத்து கொளுத்தி உள்ளார்.

மதுபோதையில் தகராறு
மேலும் அப்பகுதியில் வந்த பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார். இதனை கண்ட பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்து அவரை சமாதானப்படுத்தினர். ஆனால் அந்த நபர் மதுபோதையில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் தன்னைத்தானே கத்தியால் கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து சோமரசன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

கத்தியால் குத்தினார்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் கார்த்தி சாந்தகுமாரை பிடிக்க முயன்றார். அப்போது மது போதையில் இருந்த சாந்தகுமார் தனது கையில் வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் கார்த்திகை குத்தி உள்ளார். இதில் கார்த்திக்கு இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சாந்தகுமாரை மடக்கி பிடித்தனர்.

தீவிர சிகிச்சை
பின்னர் சாந்தகுமார் மற்றும் காயமடைந்த உதவி ஆய்வாளர் கார்த்தி இருவரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் குடிமகன் செய்த இந்த செயலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் கோரிக்கை
தமிழகத்தில் மதுபோதையில் இதுபோல் தகராறு செய்பவர்களும், கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தெருவுக்கு, தெரு டாஸ்மாக் கடைகள் உள்ளதால் உச்சக்கட்ட மதுபோதையில் குடிமகன்கள் பொதுமக்களை அல்லல்படுத்தி வருகின்றனர். எனவே தமிழகத்தில் மதுக்கடைகளை பாதியளவு குறைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
முஸ்லிம்கள் அதிகமுள்ள லட்சத்தீவில் மது விற்க அனுமதி.. 47 ஆண்டு தடையை உடைத்த மத்திய அரசு.. பின்னணி -
24 மணி நேரமும் விடாம சுத்துவாங்க.. தமிழக பெண்களுக்காக வந்த சிங்கப்பெண் படை.. வாட்ஸ்-அப் நம்பர் வருது -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications