"ஆர்எஸ்எஸ் குணம் தெரியுமா! முதல்வரே நினைத்தாலும் பேரணியை தடுக்க முடியாது..!" பரபரத்த சூர்யா சிவா

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், இது தொடர்பாக பாஜகவின் சூர்யா சிவா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

பாஜகவின் பிசி அணி மாநிலச் செயலாளர் சூர்யாவுக்கு நித்தியானந்தா தர்மரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிசி அணி மாநிலச் செயலாளர் சூர்யா சிவா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

 நித்தியானந்தா விருது

நித்தியானந்தா விருது

சூர்யா சிவா கூறுகையில், "இந்து மதத்தையும் பாதுகாக்கும் வகையிலும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் பேசிவரும் எனக்கு கைலசாவிலிருந்து சுவாமி நித்தியானந்தா சார்பாக எனக்குத் தர்ம ரக்ஷன விருது காணொலிக் காட்சி மூலமாக வழங்கப்பட்டது. இதில் எனக்கு 100% மகிழ்ச்சி.. திராவிட சித்தாந்தத்தில் இருந்து வந்து பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதத்தைப் பாதுகாத்துப் பேசுவதால் இந்த விருதைக் கொடுத்து உள்ளனர்.

 பேச யாரும் இல்லை

பேச யாரும் இல்லை

பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மதத்திற்குச் சாதகமாகப் பேசுவதற்கே விருது கொடுக்கிறார்கள். அதாவது பெரும்பான்மையாக இருந்த போதிலும், இந்து மதம் குறித்துப் பேச யாருமே இல்லை என்பதே உண்மையான நிலையாக உள்ளது. தமிழ்நாட்டில் இப்படியொரு சூழல் தான் நிலவி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்,

 முதல்வரே நினைத்தாலும் முடியாது

முதல்வரே நினைத்தாலும் முடியாது

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவே கூடாது என்று சில கட்சிகள் கூறி வருவது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவே கூடாது என்று நினைக்கலாம்.. ஆனால் 100 சதவீதம் இது நடக்கும்.. யாராலும் தடுக்க முடியாது.. எந்த சூழ்நிலையிலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தே தீரும். திருமாவளவன் அல்ல தமிழக முதலமைச்சரை நினைத்தாலும் தடுக்க முடியாது.

 ஆர்எஸ்எஸ் குணம்

ஆர்எஸ்எஸ் குணம்

தமிழகத்தில் யாரும் ஆர்எஸ்எஸை எதிர்த்துப் பேசுவதில்லை.. பெரிய கட்சிகளான திமுக, அதிமுக, பாமக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக எங்கும் பேசியதாகத் தெரியவில்லை. திருமாவளவன் தன்னை பற்றி ஊடகங்கள் பேச வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் உண்மை குணம் அவருக்கும் தெரியும். இதனால் தான் அவரே 100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்எஸ்எஸை அழிக்க முடியாது என்கிறார்.

 கூட்டணி

கூட்டணி

கூட்டணியில் அதிக இடங்களைப் பெற அவர் இப்படிப் பேசி இருக்கலாம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட இடங்களை அவர்கள் ஒதுக்கவில்லை. இதனால் கூட்டணியை விட்டுவிட்டுத் தனித்து நின்றோம். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் நின்று ஜெயத்துப் பலரும் அமைச்சர்களாக வருவார்கள். தாமரை சின்னத்திலேயே நின்று நிற்போம்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+