திருச்சியில் 4 தொகுதிகளுக்கு குறி.. கே.என்.நேரு, அன்பில் மகேஷ்க்கு செக் வைக்கும் சிபிஐ, சிபிஎம்!
திருச்சி: அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரின் தொகுதிகளை சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் கேட்க முடிவு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. சிபிஐ சார்பாக திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை கேட்கவும், சிபிஎம் சார்பாக திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய தொகுதிகளை கேட்கவும் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக கூட்டணி கட்சிகள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் கண்டு, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க தயாராகிவிட்டனர். பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

சிபிஎம், சிபிஐ
அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் இம்முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என்று பேசி வருகின்றனர். கடந்த சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டுமே வென்றனர். இதனால் இந்த இரு கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
4 தொகுதிகளுக்கு குறி
இதனிடையே திருச்சி மாவட்டத்தில் சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று குறி வைத்திருக்கின்றனர். அந்த வகையில் திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு கூறி இருக்கிறார்கள்.
கேஎன் நேரு, அன்பில் மகேஷ் தொகுதி
அதேபோல் சிபிஎம் கட்சி மாவட்டக் குழு கூட்டத்தில் மணப்பாறை மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரு தொகுதிகளையும் கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் திருச்சி மேற்கு அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதியாகும். அண்மையில் பொங்கல் பண்டிகையின் போது தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு செழிப்பாக பரிசுப்பொருட்களை வழங்கி இருந்தார்.
திமுக தலைமை முடிவு என்ன?
அதேபோல் திருவெறும்பூர் தொகுதி அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியாகும். இவர் தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இருந்தாலும் இந்த தொகுதிகளில் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளுக்கும் கிளை அமைப்பு வரை அடித்தளம் வலுவாக உள்ளது. இதனால் அரசியலில் எதுவும் சாத்தியம் என்ற வகையில் தொகுதிகளை கேட்க தயாராகி இருக்கின்றனர். இதனால் திமுக தலைமை என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
-
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
சிபிஎம், சிபிஐ கட்சிகள் எந்த தொகுதிகளில் போட்டி? திருப்பரங்குன்றத்தில் நேரடியாக களமிறங்கும் திமுக! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
தமிழகத்தில் திராவிட கட்சிகளால் மண் எடுக்க முடியாத இரண்டு தொகுதிகள்.. ஆச்சர்யம் தரும் வரலாற்று உண்மை! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள்










Click it and Unblock the Notifications