ஓபிஎஸ்ஸுக்கு 'கிலி' கொடுக்க திட்டம்.. தயாராகும் மத்திய மண்டலம்.. பக்காவா ஸ்கெட்ச் போட்ட ஈபிஎஸ் டீம்!
திருச்சி : அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வரவிருப்பதையொட்டி, அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
அதிமுகவில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கிடையேயான மோதல் காரணமாக, யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற அதிகாரப்போட்டி நிகழ்ந்து வருகிறது.
இதனால், இருவரும் செல்லும் இடங்களில் எல்லாம், பலத்தைக் காட்டும் வகையில் அவர்களது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டி வருகின்றனர்.
அந்தவகையில் நாளை திருச்சி வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈபிஎஸ் திருச்சி வருகை
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வரவுள்ளார். அதிமுக மோதலுக்குப் பிறகு முதல்முறையாக திருச்சி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 10 மணி அளவில் திருச்சி வந்தடைகிறார்.

திருச்சியில் ஆலோசனை
திருச்சி விமான நிலையம் முன்பு வயர்லெஸ் ரோடு பகுதியில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கும் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் இல்ல திருமணம்
முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில இளைஞரணி செயலாளருமான என்.ஆர்.சிவபதி இல்ல திருமண விழா நாளை மறுநாள் திருச்சியில் நடைபெறுகிறது. முன்னதாக நாளை மாலை, இந்த திருமண வரவேற்பு விழா திருச்சியில் நடக்கிறது. இதில் பங்கேற்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பின்னர், இரவு 8.30 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்குப் புறப்படுகிறார்.

சிறப்பான ஏற்பாடுகள்
அதிமுக மோதலுக்குப் பிறகு முதல் முறையாக திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்க முன்னாள் எம்.பி.யும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் ஏற்பாடுகளை செய்து வருகிறார். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி மேற்பார்வையிட்டு வருகிறார். மத்திய மண்டலத்தில் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில், ஈபிஎஸ் ஆதரவாளர்கள், பெரும் கூட்டத்தைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டம் திரளணும்
முன்னாள் அமைச்சர் சிவபதி இல்லத் திருமண விழாவில் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, சிவபதி இல்ல திருமண வரவேற்பில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாஸ் காட்டுவதற்காக இந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டராம்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications