கொரோனா கண்டெய்ண்மென்ட் ஜோனாக சமயபுரம் அறிவிப்பு.. ஒரு வாரத்துக்கு கடைகள் மூடல்
திருச்சி: கொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக திருச்சி சமயபுரம் அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்று தொடங்கி ஒரு வாரத்துக்கு கடைகள் அடைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரிய வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டிருக்கின்றன. இதனால், நிம்மதி அடைந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்கள். இதேபோல, பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலும் திறக்கப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மதிக்காமல் நடந்து கொள்வதால் சமயபுரத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ துறையினர் அச்சம் அடைந்ததோடு, சமயபுரம் பகுதியை கொரோனா வைரஸ் நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தார்கள், அதனைத்தொடர்ந்து சமயபுரம் பகுதியை நோய்த்தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், மண்ணச்சநல்லூர் தாசில்தார் முருகேசன் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, மண்ணச்சநல்லூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் மற்றும் சமயபுரம் போலீசார், வியாபார சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் 28-ந் தேதி முதல்(நேற்று) ஒரு வாரத்திற்கு கடைகளை திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலை சமயபுரம் கடைவீதி, நால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக் கடைகள், பெட்டிக் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், பஸ்கள் வழக்கம்போல இயங்கின. இதனால், வெளியூரில் இருந்து அம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் கோவில் முன்பு உள்ள ஒருசில கடைகளில் சூடம், நெய் விளக்கு வாங்கி கோவில் முன்புறம் ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர்.
இதனிடையே சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 91.95 லட்சம் ரொக்கம், 2 கிலோ 477 கிராம் தங்கமும், 2 கிலோ 880 கிராம் வெள்ளி , 31 அயல்நாட்டுநோட்டுகள் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் அசோக்குமார் தகவல் தெரிவித்தார்
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications