Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்காதல் ஜோடியின் பெரிய மனசை பார்த்தீங்களா.. தற்கொலை கடிதத்தில் தாராளம்.. கடுப்பில் குடும்பங்கள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரத்தில் வீட்டில் இருந்து மாயமான கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

Recommended Video

    கள்ளக்காதல் ஜோடியின் பெரிய மனசை பார்த்தீங்களா.. தற்கொலை கடிதத்தில் தாராளம்..

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் மயிலேறி (40). இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.

    அதே கிராமத்தை சேர்ந்த செல்வமணி மகள் மகராசி(33). இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள என்பவதால் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்தது.

    கள்ளக்காதல்

    கள்ளக்காதல்

    இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் பிறருக்கும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மே 29ல் மகராசி தனது வீட்டில் இருந்து மாயமானார். அதேபோ்ல மயிலேறியும் காணாமல் போய் இருந்தார். இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்ற சந்கேம் எழுந்தது.

    மாயமானவர்கள் பிணமாக மீட்பு

    மாயமானவர்கள் பிணமாக மீட்பு

    இதுதொடர்பாக மயிலேறியின் மனைவி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று வெள்ளாரம் ஊருக்கு கிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் 2 பேரின் உடல்கள் கிடப்பதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அது மயிலேறி மற்றும் மகராசி ஆகிய இருவரின் உடல்கள் என்பது உறுதியானது.

    விஷம் குடித்து தற்கொலை

    விஷம் குடித்து தற்கொலை

    இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், ‛‛எங்களது சாவுக்கு நாங்களே காரணம். இதுதொடர்பாக யாரிடமும் விசாரணை செய்ய வேண்டாம்'' என குறிப்பிட்டுள்ளனர்.அதாவது யாருக்கும் தொந்தரவு வந்துவிடக் கூடாது என்று தாராள மனசு காட்டியுள்ளார்களாம்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இதையடுத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஓட்டபிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+