கள்ளக்காதல் ஜோடியின் பெரிய மனசை பார்த்தீங்களா.. தற்கொலை கடிதத்தில் தாராளம்.. கடுப்பில் குடும்பங்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரத்தில் வீட்டில் இருந்து மாயமான கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் மயிலேறி (40). இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.
அதே கிராமத்தை சேர்ந்த செல்வமணி மகள் மகராசி(33). இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள என்பவதால் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்தது.

கள்ளக்காதல்
இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் பிறருக்கும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மே 29ல் மகராசி தனது வீட்டில் இருந்து மாயமானார். அதேபோ்ல மயிலேறியும் காணாமல் போய் இருந்தார். இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்ற சந்கேம் எழுந்தது.

மாயமானவர்கள் பிணமாக மீட்பு
இதுதொடர்பாக மயிலேறியின் மனைவி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று வெள்ளாரம் ஊருக்கு கிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் 2 பேரின் உடல்கள் கிடப்பதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அது மயிலேறி மற்றும் மகராசி ஆகிய இருவரின் உடல்கள் என்பது உறுதியானது.

விஷம் குடித்து தற்கொலை
இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், ‛‛எங்களது சாவுக்கு நாங்களே காரணம். இதுதொடர்பாக யாரிடமும் விசாரணை செய்ய வேண்டாம்'' என குறிப்பிட்டுள்ளனர்.அதாவது யாருக்கும் தொந்தரவு வந்துவிடக் கூடாது என்று தாராள மனசு காட்டியுள்ளார்களாம்.

போலீஸ் விசாரணை
இதையடுத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஓட்டபிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications