ஸ்டெர்லைட்டை உடனே திறக்க உச்சநீதிமன்றம் கூறவில்லை: கலெக்டர்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, பாத்திமா பாபு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவே தொடரலாம் என தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சூழ்நிலையில் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மாலை 5 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் அந்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி.
அப்போது அவர் கூறுகையில், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பட்டியலுக்கு வந்துள்ளது. எனவே விரைவில் அந்த மனு மீதான விசாரணை தொடங்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாத்திமா பாபு எதிர்மனுதாரராக உள்ள வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் கூட உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற எந்த ஒரு ஷரத்தும் தெரிவிக்கப்படவில்லை. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பூர்த்தி செய்த பிறகுதான் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இன்னும் அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில்தான், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்படாது. இவ்வாறு சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications