தூத்துக்குடி: புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது. காலை 6.05 மணிக்கு தொடங்கி 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் நேரத்தில், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை 12ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறும். கும்பாபிஷேகத்தை பக்தர்கள் எளிதாக கண்டுகளிக்கும் வகையில், பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 6000 போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண குவிந்திருப்பதால், அவர்கள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்க ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல கும்பாபிஷேக நீர், பக்தர்கள் மீது தெளிப்பதற்கு 20 ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திருச்செந்தூர் வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் நின்று செல்வதற்கு 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் திருச்செந்தூரில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
Jul 07, 2025, 6:40 am IST
கும்பாபிஷேகத்தை காண ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டதால், பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது.
Jul 07, 2025, 6:38 am IST
கும்பாபிஷேகத்தை காண வெளிநாட்டிலிருந்தும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்
Jul 07, 2025, 6:32 am IST
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு; பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தூவப்பட்டு வருகிறது
Jul 07, 2025, 6:30 am IST
10 லட்சம் பக்தர்களின் அரோகரா முழக்கத்திற்கு இடையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு
Jul 07, 2025, 6:26 am IST
ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு, மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம்
Jul 07, 2025, 6:26 am IST
அமைச்சர் சேகர்பாபு, ஆதீனங்கள் பலர் முன்னிலையில் திருக்கோயில் குடமுழுக்கு தொடங்கியது
Jul 07, 2025, 6:24 am IST
தமிழில் வேதங்கள் முழங்க, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தொடங்கியது
Jul 07, 2025, 6:24 am IST
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தொடங்கியது
Jul 07, 2025, 6:23 am IST
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தொங்கியது
பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோயில் குடமுழுக்கு தொடங்கியது
Jul 07, 2025, 6:22 am IST
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு; கும்பாபிஷேகத்தை காண 10 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்
கடலில் இறங்கும் பக்தர்களின் பாதுகாப்பை கடலோர காவல் துறையினர் உறுதி செய்து வருகின்றனர்
Jul 07, 2025, 6:16 am IST
ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு கும்பாபிஷேகம் இன்னும் சில விநாடிகளில் நடக்கிறது
மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது
Jul 07, 2025, 6:14 am IST
தமிழ் மொழியில் முருக பெருமானுக்கு அர்ச்சனை செய்து, குடமுழுக்கு தொடங்க இருக்கிறது
பக்தர்களின் பாதுகாப்பை காவல்துறையினர் தொடர்ந்து உறுதி செய்து வருகின்றனர்
Jul 07, 2025, 6:11 am IST
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு; பக்தர்கள் அரோகரா முழக்கம்
பக்தர்களின் அரோகரா முழக்கத்துக்கு இடையில் கோயில் கும்பாபிஷேகம் தொடங்குகிறது
6:11 AM, 7 Jul
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு; பக்தர்கள் அரோகரா முழக்கம்
பக்தர்களின் அரோகரா முழக்கத்துக்கு இடையில் கோயில் கும்பாபிஷேகம் தொடங்குகிறது
6:14 AM, 7 Jul
தமிழ் மொழியில் முருக பெருமானுக்கு அர்ச்சனை செய்து, குடமுழுக்கு தொடங்க இருக்கிறது
பக்தர்களின் பாதுகாப்பை காவல்துறையினர் தொடர்ந்து உறுதி செய்து வருகின்றனர்
6:16 AM, 7 Jul
ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு கும்பாபிஷேகம் இன்னும் சில விநாடிகளில் நடக்கிறது
மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது
6:22 AM, 7 Jul
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு; கும்பாபிஷேகத்தை காண 10 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்
கடலில் இறங்கும் பக்தர்களின் பாதுகாப்பை கடலோர காவல் துறையினர் உறுதி செய்து வருகின்றனர்
6:23 AM, 7 Jul
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தொங்கியது
பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோயில் குடமுழுக்கு தொடங்கியது
6:24 AM, 7 Jul
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தொடங்கியது
6:24 AM, 7 Jul
தமிழில் வேதங்கள் முழங்க, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு தொடங்கியது
6:26 AM, 7 Jul
அமைச்சர் சேகர்பாபு, ஆதீனங்கள் பலர் முன்னிலையில் திருக்கோயில் குடமுழுக்கு தொடங்கியது
6:26 AM, 7 Jul
ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு, மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம்
6:30 AM, 7 Jul
10 லட்சம் பக்தர்களின் அரோகரா முழக்கத்திற்கு இடையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு
6:32 AM, 7 Jul
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு; பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தூவப்பட்டு வருகிறது
6:38 AM, 7 Jul
கும்பாபிஷேகத்தை காண வெளிநாட்டிலிருந்தும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்
6:40 AM, 7 Jul
கும்பாபிஷேகத்தை காண ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டதால், பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது.
The renowned Thiruchendur Subramanya Swamy Temple is conducting the Kudamuzhuku (Maha Kumbabishekam) ceremony today. The sacred ritual began early morning between 6:05 AM and 6:50 AM, with the Maha Kumbabishekam performed for the Rajagopuram Kumbha Kalasams (sacred temple towers). This auspicious event marks a significant spiritual moment at the famous Murugan temple in Tamil Nadu.