அதை மறக்க முடியாது.. இலங்கை தமிழர் புதிய குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழாவில் ஸ்டாலின் உருக்கம்
வேலூர்: எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்றும், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக என்றும் கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் உள்ள 106 முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருந்தார். இதன்படி முதற்கட்டமாக 3510 வீடுகள் புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கு ரூ.142. 16 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் துவங்கி வைத்தார்.
இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ரூ.30 கோடி மதிப்பில் இலங்கை தமிழ் மக்களுக்காக இதர அடிப்படை வசதிகளுக்காக முதல்வர் அடிக்கல் நாட்டியதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இவ்விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

மறக்க முடியாது
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ஒரு அடையாள சொல்லாகத்தான் இலங்கை தமிழர்கள் என்று நான் அவர்களை அழைத்தேன். மற்றபடி அவர்கள் எங்கே எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அவர்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் தான். இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் வாழும் தமிழர்கள், இனத்தால், மொழியால், நாகரீகத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்டவர்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் அனைவரும் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். கடல் தான் நம்மை பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் நம்மை இணைத்துக்கொண்டிருக்கிறது. இலங்கை தமிழர்களின் கண்ணீரை மறக்க முடியாது.

பல்வேறு திட்டங்கள்
இலங்கை தமிழர்களுக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் . 1983 ஆம் ஆண்டு அவர்கள் தமிழகத்திற்கு வந்த போது அவர்களுக்கு திமுக ஆதரவு அளித்தது. அவர்கள் தங்கவைக்கப்பட்ட முகாம்கள் எல்லாம் 1997 ஆம் ஆண்டு மோசமடைந்துவிட்டது. இதனால் அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.

106 முகாம்கள்
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு இலங்கை தமிழர்களுக்காக எந்த நன்மையையும் செய்யவில்லை அதை பற்றி கவலைப்படவில்லை இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல; நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; என்னை உங்களின் சகோதரனாக ஏற்றுக்கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள்106 முகாம்களில் 19046 இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு 7469 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளது. முதற்கட்டமாக 3510 வீடுகளை கட்ட துவங்கியுள்ளோம்.

மாதாந்திர உதவி தொகை
அடுத்த கட்டமாக மீதமுள்ள வீடுகள் கட்டப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உதவி தொகை உயர்த்தபடவில்லை. அது உயர்த்தபடும். இலங்கை தமிழர் மாணவர்கள் கல்வி கற்க பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இவர்களின் அரிசி மானியத்தை அரசு முழுமையாக ஏற்கும்.

அடிப்படை வசதிகள்
இது போன்று இலங்கை தமிழர்களுக்காக அறிவிக்கப்பட்ட 10 திட்டங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும். .அவர்களுக்கு குடிநீர் குடியிருப்பு மின்சாரம் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 30 கோடியில் செய்யபடும். திமுக அரசு இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் தனது கதவை திறந்து வைத்துள்ளது" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து இலங்கை தமிழர் முகாம் குடியிருப்புக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications