வாந்தி, வயிற்றுப்போக்கு... மெடிக்கல் ஷாப் மாத்திரை சாப்பிட்ட 2 குழந்தைகள் பலி

Subscribe to Oneindia Tamil

வேலூரில் உடல்நலக்குறைவு காரணமாக மெடிக்கல் ஷாப்பில் மாத்திரைகளை சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

Children dead after consuming medical shop pills in Vellore

மாத்திரையை விழுங்கிய 2 குழந்தைகளும் சிறிது நேரத்தில் சுயநினைவை உயிரிழந்ததால் பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் இழந்துவிட்டனர்.

வேலூர் கஸ்பா பஜார் தெருவில் அன்சர் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு சுரையா என்ற மனைவியும் 4 வயதுடைய ஆப்ரின், 3 வயதுடைய அசன் ஆகியோ குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 நாட்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாதாரண பாதிப்பாகத்தான் இருக்கும் என கருதிய பெற்றோர் அருகில் உள்ள தர்காவிற்கு குழந்தைகளை அழைத்து சென்று தாயத்து கட்டிக் கொண்டு வந்துவிட்டனர். தொடர்ந்து 2 குழந்தைகளும் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டதால் மருத்துவமனைக்கு செல்லாமல் அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளனர். மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்துள்ளனர். இதனால் பதறிப்போன பெற்றோர் இரண்டு குழந்தைகளும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும்போதே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+