துரைமுருகன் மகனுக்கு சீட்டா.. திமுக பிரமுகர் விலகல்.. பாமகவில் சேர்ந்தார்!
வேலூர்: துரைமுருகன் மகனுக்கு சீட் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவிலிருந்து விலகிய பிரமுகர் பாமகவில் போய்ச் சேர்ந்தார்.
திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணி காட்சிகளுக்கு எந்த தொகுதிகள் திமுக எந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது நேற்றே இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதில் வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

இந்த தேர்தலில் திமுக போட்டியிடும் 20 இடங்களில் ஏறத்தாழ 8 இடங்களில் திமுக தலைவர்களின் வாரிசுகளே போட்டியிடுகிறார்கள். இதனால் அடிமட்ட தொண்டர்கள் முதல் கட்சியின் நிர்வாகிகள் வரை பலரும் அதிருப்தியில் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டால் அங்கு தேமுதிக எளிதாக வென்று விடும் ஆகவே பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு போட்டியிட இடம் கொடுக்கக் கூடாது என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி கவுதம சிகாமணிக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதுபோலவே வேலூர் தொகுதியை திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு கேட்டு கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே துரைமுருகன் காய் நகர்த்தி வந்தார். ஆனால் அப்போது அவருக்கு சீட் வழங்கப்படவில்லை மாறாக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டது. அப்போது திமுகவில் பல உள்ளடி வேலைகள் நடைபெற்றதால் திமுக கூட்டணி அப்போது தோற்றதாக கூறப்படுகிறது.
வேலூரை பொருத்தமட்டில் அங்கு வன்னியர்களின் வாக்கு வங்கி அதிகம். அதிமுக கூட்டணியில் இப்போது புதிய நீதி கட்சி சார்பில் A.C சண்முகம் போட்டியிடுகிறார். கடந்தமுறையே பலவீனமான பாஜக கூட்டணியில் இருந்துகொண்டே தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட 63393 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று வெற்றி வாய்ப்பை பறிகொடுத்திருந்தார். இந்நிலையில் வன்னியர் வாக்கு வங்கி பலமாக உள்ளதால் எப்படியும் சொந்த சாதி பலத்தால் வென்று விடலாம் என்று துரைமுருகன் தரப்பு கணக்கு போட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் திமுகவினரிடம் துரைமுருகனுக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தின் திமுக முக்கிய பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான சிவூர் துரைசாமி அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவர் பாமகவில் இணைந்துள்ளார்.
மாவட்டத்தில் கணிசமான ஆதரவாளர்களையும் நல்ல செல்வாக்கையும் பெற்றுள்ள துரைசாமி தேர்தல் நெருக்கத்தில் பாமகவில் இணைந்துள்ளது திமுகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில நிர்வாகிகள் வெளியேற தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications