அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் ஆகனும்.. தங்கதேர் இழுத்து வேண்டி கொண்ட வேலூர் தொண்டர்கள்
வேலூர்: அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சியின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என வேண்டி அவரது ஆதரவாளர்கள் வேலூரில் உள்ள கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக்க அவரது ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர்.
இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வத்தை, எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர்.

நீதிமன்றத்தில் முறையீடு
தொடர்ந்து இருவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் நாடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்திலும் கட்சி விவகாரம் தொடர்பாக இருதரப்பும் தகவல்களை வழங்கி உள்ளது.

பெரும் குழப்பம்
இந்நிலையில் தான் ஜூலை 11ல் அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்தி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

சின்னம் கிடைக்கவில்லை
இந்த குழப்பத்தின் ஒருபகுதியாக தான் தற்போது நடைபெற மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் என மொத்தம் 34 பதவியிடங்களில் அதிமுகவினர் போட்டியிடவில்லை. அதிமுகவின் சின்னம் வழங்குவதற்கான படிவம் ஏ, பி ஆகியவற்றில் கையெழுத்திடுவது தொடர்பான பிரச்சனையால் அதிமுகவினர் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர். ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையேயான பதவி போட்டியால் தான் அதிமுக சார்பில் போட்டியிட முயன்ற தொண்டர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை.

தங்கத்தேர் இழுத்த தொண்டர்கள்
இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக ஓ பன்னீர் செல்வம் ஆக வேண்டும் என வேண்டி வேலூரில் தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்துள்ளனர். வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வர வேண்டும் என மாவட்டச் செயலாளர் அப்பு தலைமையிலான அதிமுக தொண்டர்கள் தங்கத்தேரை கோவிலை சுற்றி வடம் பிடித்து இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications