சிறையில் திங்கள்கிழமை இரவு நளினி தற்கொலைக்கு முயற்சி என வழக்கறிஞர் தகவல்
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நளினி திங்கள் கிழமை (நேற்று) இரவு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சிறையில் இருக்கும் சக கைதிகளுடன் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலைக்கு முயற்சித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது கணவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இவரது தற்கொலை முயற்சி குறித்து அவரது வழக்கறிஞர் புகழேந்தி தனியார் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''கடந்த 29 ஆண்டுகளில் முதன் முறையாக நளினி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சிறையில் நளினிக்கும் உடன் அடைக்கப்பட்டு இருக்கும் மற்றொரு ஆயுள் தண்டனை கைதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இதுகுறித்து சிறை அதிகாரியிடம் மற்றொரு கைதி தெரிவித்துள்ளார். இதனால், தற்கொலைக்கு நளினி முயற்சித்து இருப்பதாக தெரிகிறது.
இதற்கு முன்பு நளினி இதுபோல் நடந்து கொண்டது இல்லை. ஏன் அவ்வாறு நளினி நடந்து கொண்டார் என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக வேலூர் சிறையில் இருந்து நளினியை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது கணவர் முருகன் கோரிக்கை வைத்துள்ளார். சட்ட ஆலோசனைகள் இதற்கு தேவைப்படுகிறது. அறிந்த பின்னர் உடனடியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஸ்ரீபெரும்புத்தூரில் 1991 மே 21ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்து இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பையஸ் ஆகிய ஏழு பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு தடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. பின்னர் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications