Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருப்பா அந்த கண்டிராக்டர்? இவ்ளோ பெரிய ஜீப் கூடவா கண்ணுக்கு தெரியாது! வலை போட்டு தேடும் வேலூர்!

Subscribe to Oneindia Tamil

வேலூர் : வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணியின் போது ஏற்கனவே டூவீலரோடு சிமெண்ட் சாலை போட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்துக்குள்ளாகி சர்ச்சையான நிலையில், தற்போது பெரிய ஜீப்போடு சேர்த்து சாலை போட்டுள்ளதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Recommended Video

    ஜீப் மேலயும் ரோடு போட்டுட்டாங்க... வைரலாகும் வீடியோ

    சமூக வலைதளங்கள், செல்போன் கேமராக்கள் என டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்தில் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது ஐ வில் பி வாட்சிங்! என்பது போல், யாரும் யாரிடமும் தப்பித்து விட முடியாது. அந்த அளவுக்கு நம்மை ஆயிரம் கண்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

    குற்ற செயல்களில் இருந்து குதூகலம் வரவழைக்கும் உற்சாக வீடியோக்கள் வரை சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் பல்வேறு நிகழ்ச்சிகள் பதிவாகி, வெளியாகி மக்களிடம் வரவேற்புகளையும் கண்டனங்களையும் பெற்று வருகிறது.

    வேலூர் சர்ச்சை

    வேலூர் சர்ச்சை

    அந்த வகையில் வேலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் வைரலாகி பலத்த விமர்சனங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது வேறு ஒன்றும் இல்லை வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளின் போது அமைக்கப்பட்ட சாலை விவகாரம் தான் அது. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக மெயின் ரோடு காளிகாம்பாள் தெரு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

    சிமெண்ட் சாலை

    சிமெண்ட் சாலை

    அப்போது காளிகாம்பாள் தெருவை சேர்ந்த சிவா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வழக்கம் போல கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார் காலையில் வந்து பார்த்தபோது புத்தம் புதியதாக சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது அது கூட பரவாயில்லை அவர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முடியாத அளவுக்கு சாலை போட்டிருப்பதை கண்டு அதிர்ந்து போன சிவா எவ்வளவோ முயன்றும் வாகனத்தை எடுக்க முடியவில்லை. பின்னர் அந்த ரோட்டை உடைத்து வண்டியை மீட்டார்.

    மேலும் ஒரு சம்பவம்

    மேலும் ஒரு சம்பவம்

    இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு உன்னிப்பாக வேலை பார்த்த வேலைக்காரர்களையும் ஒப்பந்ததாரரையும் நெட்டிசன்கள் மிகக் கடுமையாக விமர்சித்தனர் இந்நிலையில் இதே போன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் வேறு எங்கும் இல்லை அதே வேலூரில் தான். வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலரை அப்புறப்படுத்தாமலேயே சிமெண்ட் ரோடு போட்டது அடங்குவதற்குள்ளாக இந்த சம்பவம் நடந்திருக்கிருக்கிறது.

    ஜீப்போடு தார்சாலை

    ஜீப்போடு தார்சாலை

    அதே வேலூரில் சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓடாத பழைய ஜீப்பையும் அப்புறப்படுத்தாமல் ஏடாகூடமாக தார்ச்சாலை போடப்பட்டிருக்கிறது. அப்பகுதி மக்கள் புகாரளிக்கவே, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் வந்து கிரேன் மூலம் ஜீப்பை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தியிருக்கிறார். அதையடுத்து, சாலை சீர் செய்யப்பட்டது. தற்போது இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+