விழுப்புரம் மாநாடு.. அது நடக்கலாம்.. அதிமுகவின் கனவு நிறைவேறப் போகிறது!
விழுப்புரம்: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மாநில மாநாடு வரும் 28ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிமுகவின கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையை ஆளும் அதிமுக முடுக்கிவிட்டுள்ளது. இதேபோல் எதிர்தரப்பான திமுகவும் தீவிரமாக உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, புதிய நீதிகட்சி, முக்குலத்தோர் பூலிப்படை, தமாகா, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, ஆகியவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தனித்து போட்டி
திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் அதிக இடங்களில் தோற்றதால், திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.. அதிமுக கடந்த முறை தனித்துநின்று 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதால் அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது.

அதிமுக கூட்டணி
ஆனால் இந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. கூட்டணியை இறுதி செய்துவிட்ட நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஓரளவு தொகுதிகளை விட்டுக்கொடுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம் மாநாடு
இந்நிலையில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. அந்த கனவு விழுப்புரம் மாநாட்டில் நிறைவேற அதிக வாய்ப்பு உள்ளது. அதிமுக மாநில மாநாடு வரும் 28ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிமுகவின கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷா பங்கேற்கிறார்
விக்கிரவாண்டிக்கு அருகே உள்ள வி.சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டிற்கான பூமி பூஜையும் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளதாக சொல்கிறார்கள்.

23 வருடத்திற்கு பின்
முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 1,2,3 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் அதிமுக மாநில மாநாடு நடைபெற்றது. அதன்பின்னர் அதிமுக சார்பில் மாநில மாநாடு நடத்தப்படாத நிலையில், வருகிற 28-ம் தேதி மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications