திராவிட மாடல்..புரியலையே? எம்ஜிஆர், ஜெயலலிதா மாடல்தான் பெஸ்ட் - போட்டு தாக்கும் சசிகலா
கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. 600க்கும் மேற்பட்ட கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன என்று சசிகலா கூறியுள்ளார்
விழுப்புரம்: திராவிட மாடல் என்றால் என்ன என்றே ஒன்றும் புரியவில்லை என்று சசிகலா கூறியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் சமத்துவக்காகப் பாடுபட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் அதுதான் சிறந்த மாடல் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுக தலைமையை நான் ஏற்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதற்காகத்தான் நான் செயல்பட்டு வருகிறேன். அதிமுக இப்படி இருப்பதால் திமுகதான் பயனடைகிறது.
அதிமுக ஒன்றாக இணைவதை திமுகவினர் யாருமே விரும்பமாட்டார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும் என்றுதான் திமுகவினர் நினைக்கிறார்கள். 38 ஆண்டு கால அனுபவம் கொண்ட நான், விரைவில் அதிமுகவை வழி நடத்துவேன்.

கட்சியை பலவீனப்படுத்துவதா?
அதிமுகவின் கட்சிக் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என்று கூறிய சசிகலா, அப்படி சொல்பவர்கள் திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள் என்றார். அதிமுகவை காப்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமே தவிர, இருப்பவர்களை விரட்டி அடித்து கட்சியைப் பலவீனப்படுத்தக் கூடாது.

அதிமுக செயற்குழு
சென்னை வானகரத்தில் நடக்கவிருப்பது உண்மையான அதிமுக செயற்குழு கூட்டம் கிடையாது. எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஏற்பட்ட அதே சோதனைகள்தான் தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பெண்கள் சேர்ந்து அப்போது கட்சியை மீட்டெடுத்து முன்னேற்றினோம். அதேபோல விரைவில் இப்போதுள்ள பிரச்னையையும் சரி செய்து, என் தலைமையின் கீழ் அதிமுகவை கொண்டு வருவேன் என்று சசிகலா தெரிவித்தார்.

திராவிட மாடல்
திமுகவினர் திராவிட மாடல் என்று பேசி வருகிறார்கள். எனக்கு தற்போது வரை திராவிட மாடல் என்றால் என்ன என்றே ஒன்றும் புரியவில்லை. ஏழை, எளிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினர். சமத்துவக்காகப் பாடுபட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் அதுதான் சிறந்த மாடல்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. 600க்கும் மேற்பட்ட கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன. குறிப்பாக சென்னையில் அதிகப்படியான கொலைகள் நடக்கின்றன. சென்னை பெருநகர ஆணையர் அலுவலகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதுதான் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்றும் சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications