விருதுநகரில் லிஃப்ட் கொடுப்பது போல பைக்கில் ஏற்றி சென்று மூதாட்டி கொலை.. 5 பவுன் நகைக்காக தாய் - மகள் கொடூரம்
விருதுநகர்: சாலையில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை லிஃப்ட் கொடுப்பதாக கூறி தங்களது மொபட்டில் ஏற்றி சென்ற தாய் மகள் இருவரும் செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் நகைக்காக தாய் மகள் இருவரும் சேர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் மொபட்டை நிறுத்தி கழுத்தை நெரித்து கொன்றுள்ள சம்பவம் விருதுநகரில் அரங்கேறி இருக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகைப்பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. ஆனால் சமீப காலமாக இந்த சம்பவங்கள் சற்று குறைந்து இருந்தன.

லிஃப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி
ஆனால் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாலும், பணத்தின் மீதான மோகத்தாலும் மீண்டும் ஒரு சில இடங்களில் நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தாய் மகள் இருவரும் சேர்ந்து தனியாக சாலையில் நடந்து சென்ற மூதாட்டிக்கு லிஃப்ட் கொடுத்து உதவுவது போல 5 பவுன் நகையை அபேஸ் செய்ததோடு, அந்த மூதாட்டியை கொலையும் செய்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
திருமண வீட்டிற்கு சென்ற மூதாட்டி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவரது மனைவி அம்பிகா (வயது 62). சம்பவத்தன்று இவர் காரியாபட்டி அருகே உள்ள தோப்பூர் கிராமத்திக் நடந்த திருமண விழாவிற்காக சென்று இருந்தார். ஆனால் மாலை நேரம் ஆகியும் மூதாட்டி வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த குடும்பத்தினர் திருமண வீட்டினர், உறவினர்களிடம் விசாரித்தனர்.
ஆனால் அவர்களும் இங்கு இல்லை என கூறிவிட்டனர். இதனால் நாலாபுறமும் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் திருச்சுழி போலீசார் மூதாட்டியை தேடி வந்தனர். இதற்கிடையே தான் திருச்சுழி டூ காரியாபட்டி செல்லும் வழியில் புலிக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகை
இதில் முட்புதரில் பிணமாக கிடந்தது, மூதாட்டி அம்பிகா என்பது தெரியவந்தது. அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஏன் மூதாட்டி இங்கு தனியாக வரவேண்டும்?, காட்டுப்பகுதிக்கு வந்தது ஏன்?, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகள் எங்கே போனது? யாரேனும் அழைத்து வந்து கொன்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு மொபட்டில் சென்ற இருவர் ஒன்று உடல் கிடந்த குறிப்பிட்ட தொலைவில் மூதாட்டியை அழைத்து சென்றது தெரியவந்தது. இவர்கள் ஏன் மூதாட்டியை அழைத்து செல்ல வேண்டும், இவர்களிடம் விசாரித்தால் உண்மை தெரியும் என போலீசார் மொப்பட்டின் எண்ணை வைத்து அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன.
தாயும் மகளும் சேர்ந்து கொன்றது அம்பலம்!
அதாவது அந்த இரு பெண்கள் தான் மூதாட்டியை லிஃப்ட் கொடுப்பது போல், உதவி செய்வதாக கூறி மொபட்டில் ஏற்றி வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவரது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. காரியாபட்டி பகுதியை சேர்ந்த 39 வயது பெண் மற்றும் அவரது மகள் 17 வயது சிறுமி என இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?














Click it and Unblock the Notifications