400 சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்... அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளருக்கு 180 வருடம் ஜெயில்
வாஷிங்டன்: சுமார் 400 குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அமெரிக்க கூடைப்பந்து பயிற்சியாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 180 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரக் ஸ்டீபன் வயது 43. இவர் அயோவா மாகாணத்தில் இளைஞர் கூடை பந்து பயிற்சியாளாக உள்ளார். இவர் அயோவா பார்ன்ஸ்டார்மர்ஸ் என்ற இளைஞர்களுக்கான திட்டம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் தான் அயோவா, வடக்கு அயோவா மற்றும் விஸ்கான்சின் போன்ற பள்ளிகளில் மாணவர்கள் தடகள ஸ்காலர்ஷிப்பைப் பெற முடியும்

இதற்காக தன்னிடம் வரும் மாணவர்களை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். சுமார் 400க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தன்னை ஒரு பெண்ணாக நினைத்துக்கொண்டு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பல விளையாட்டு வீரர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.
இது தொடர்பாக எழுத்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட கிரக் ஸ்டீபனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றம் ஸ்டீபனுக்கு சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக 180 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications