கொரோனாவை கட்டுப்படுத்தாமல் இந்தியாவில் தியேட்டர்களை திறக்க கூடாது-யு.எஸ். ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸ்
வாஷிங்டன்: கொரோனாவை கட்டுப்படுத்தாமல் இந்தியாவில் தியேட்டர்களை திறக்க கூடாது என அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸ் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ட்விட்டரில் சரண் பிரகாஷ் என்பவர் அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவ ஆராய்ச்சியாளர் பகீம் யூனஸிடம் 100% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது சரியான நடவடிக்கையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பகீம் யூனஸ், இந்திய திரையரங்குகள் மோசமான காற்றோட்ட வசதி, இறுக்கமாக மூடப்பட்டதாக, மக்கள் கூட்டம் நிறைந்ததாக இருக்கின்றன. கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தாமல் திரையரங்குகளை திறக்கக் கூடாது;

ஆகையால் திரையரங்குகள் திறப்பதை தவிர்க்கவும்; தவிர்க்கவும் தவிர்க்கவும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications