சீனாவில் பரவும் கொரோனா உயிரை குடிப்பவை அல்ல.. "ரிலாக்ஸா இருங்க".. உறுதியாக கூறும் வல்லுனர்
வாஷிங்டன்: "சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது உண்மைதான். இருந்தபோதிலும், அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வீரியம் கொண்டது அல்ல" என்று வாஷிங்டன் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி டாக்டர் க்ரிஸ் முர்ரே உறுதிபட தெரிவித்துள்ளார்.
பலரும் கூறுவதை போல சீனாவில் பரவுவது, கொரோனா வகையின் புதிய திரிபு கிடையாது என்றும், மாறாக, ஓமிக்ரான் வகை வைரஸ் தொற்றுதான் எனவும் முர்ரே தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவி வரும் கொரோனா மிகவும் ஆபத்தானது என பல விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில், முர்ரேவின் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மீண்டும் மிரட்டும் கொரோனா
தற்போது சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவி, அங்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு 5,000-க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டிருக்கிறது. இது உலக நாடுகளை மீண்டும் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், கடந்த முறையை போலவே இப்போதும் தங்கள் நாட்டில் வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து சீனா வாய் திறக்க மறுத்து வருகிறது.

பயமுறுத்தும் விஞ்ஞானிகள்
சீனாவில் கொரோனா மீண்டும் பரவுவதே ஒரு பக்கம் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலில், ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானிகளும் ஒவ்வொரு விதமாக இந்த வைரஸ் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன. சீனாவில் பரவுவது கொரோனா புதிய திரிபு என்றும், இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என ஒருதரப்பு விஞ்ஞானிகளும், இது நேரடியாக மூளையை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸ் என மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளும் கூறி பீதியை அதிகப்படுத்தி வருகின்றனர்.

"பயப்படத் தேவையில்லை"
இந்நிலையில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் க்ரிஸ் முர்ரே, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "2023-ம் ஆண்டு கோடிக்கணக்கான ஓமிக்ரான் வைரஸ் தொற்று மக்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், நன்றாக புரிந்துகொள்ளுங்கள். அவை ஓமிக்ரான் தொற்றாகவே இருக்கும். உருமாறிய கொரோனா வைரஸாக இருக்கிறது. சீனாவில் தற்போது பரவி வருவதும் ஓமிக்ரானின் ஒரு வகைதான். எனவே, யாரும் இதுகுறித்து அச்சமடைய தேவையில்லை.

"உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது"
சீனாவில் தற்போது பரவி ஓமிக்ரான் வைரஸ் என்பதால்தான் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும். ஆனால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக, கடந்த ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டது. ஆனால், அது வேறு நாடுகளுக்கு பரவில்லை. கட்டுப்படுத்தப்பட்டும் விட்டது. அதே சமயத்தில், ஓமிக்ரான் மனிதர்களுக்கு வேகமாக பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்தது" என க்ரிஸ் முர்ரே கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications