பயங்கரவாத குழுக்களும் பாகிஸ்தானும்.. ரொம்பவே கண்காணிக்கிறோம்..பிரதமர் மோடியிடம் கமலா ஹாரிஸ்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன; இந்த குழுக்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுவதாக பிரதமர் மோடியிடம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.
குவாட் உச்சி மாநாட்டுக்காக அமெரிக்காவுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின் போது அடோப் உட்பட உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் பிரதமர் மோடி. இச்சந்திப்புக்கு முன்னதாக கூட்டறிக்கை ஒன்றையும் இருவரும் வெளியிட்டனர்.

பேசியது என்ன?
கமலா ஹாரிஸுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா கூறியதாவது; ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்
அப்போது கமலா ஹாரிஸ் தாமாகவே முன்வந்து பயங்கரவாத குழுக்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடியிடம் சுட்டிக்காட்டினார். பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால் இந்தியா, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏதும் வராது எனவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
Recommended Video

கண்காணிப்பு வளையத்தில் பாக்.
பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா பல பத்தாண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையும் பயங்கரவாத சக்திகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவதை நெருக்கமாக அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் உலகம் முழுவதுமே ஜனநாயகவாதிகள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றனர். நமது நாடுகளின் ஜனநாயக அமைப்புகளின் விழுமியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார். இவ்வாறு ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா கூறினார்.

குவாட் உச்சி மாநாடு
குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபிடன், பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவின் அதிபரான பின்னர் ஜோ பிடனை பிரதமர் மோடி முதல் முறையாக வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications