பயங்கரவாத குழுக்களும் பாகிஸ்தானும்.. ரொம்பவே கண்காணிக்கிறோம்..பிரதமர் மோடியிடம் கமலா ஹாரிஸ்
வாஷிங்டன்: பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன; இந்த குழுக்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுவதாக பிரதமர் மோடியிடம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.
குவாட் உச்சி மாநாட்டுக்காக அமெரிக்காவுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின் போது அடோப் உட்பட உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் பிரதமர் மோடி. இச்சந்திப்புக்கு முன்னதாக கூட்டறிக்கை ஒன்றையும் இருவரும் வெளியிட்டனர்.

பேசியது என்ன?
கமலா ஹாரிஸுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா கூறியதாவது; ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்
அப்போது கமலா ஹாரிஸ் தாமாகவே முன்வந்து பயங்கரவாத குழுக்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடியிடம் சுட்டிக்காட்டினார். பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால் இந்தியா, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏதும் வராது எனவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
Recommended Video

கண்காணிப்பு வளையத்தில் பாக்.
பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா பல பத்தாண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையும் பயங்கரவாத சக்திகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவதை நெருக்கமாக அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் உலகம் முழுவதுமே ஜனநாயகவாதிகள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றனர். நமது நாடுகளின் ஜனநாயக அமைப்புகளின் விழுமியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார். இவ்வாறு ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா கூறினார்.

குவாட் உச்சி மாநாடு
குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபிடன், பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவின் அதிபரான பின்னர் ஜோ பிடனை பிரதமர் மோடி முதல் முறையாக வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications