அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தீர.. சித்தர்கள் சொன்ன அபூர்வ பரிகாரம்..இதை செய்ய மறக்காதீங்க

மீன்களுக்கு உணவாக பொரி கொடுக்கவும், நாம் அளிக்கும் பொரியை மீன்கள் எத்தனை சாப்பிடுகிறதோ அத்தனை சாபங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் எந்த ஜென்மத்தில், எந்த பாவத்தை செய்ததற்காக இந்த ஜென்மத்தில் இவ்வளவு கஷ்டப் படுகின்றோம் என்பது நமக்கே தெரியாது. இருப்பினும் அந்த பாவத்தை எப்படி கழிப்பது? அறியாமல் செய்த பாவங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போக, நாம் செய்யக்கூடிய சுலபமான பரிகார முறைகள் உள்ளன.

நாம் எந்த ஜென்மத்தில், எந்த பாவத்தை செய்ததற்காக இந்த ஜென்மத்தில் இவ்வளவு கஷ்டப் படுகின்றோம் என்பது நமக்கே தெரியாது. இருப்பினும் அந்த பாவத்தை எப்படி கழிப்பது? அறியாமல் செய்த பாவங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போக, நாம் செய்யக்கூடிய சுலபமான பரிகார முறைகள் உள்ளன.

மனிதன் அவஸ்தைக்கு முக்கிய காரணமே பித்ரு வழி பாவங்கள்தான், இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும். எனவே நாம் நம்முடைய பாவங்கள் தீர சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

பாவ கணக்கு

பாவ கணக்கு

சிலர் அறியாமல் பாவம் செய்வார்கள்..சிலர் நாம் செய்வது பாவம் என்று அறிந்தே செய்வார்கள். அதனால் அவர்களின் பாவக்கணக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தப்பு செய்தால் அதற்கு தண்டனை கண்டிப்பாக உண்டு. ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள். சிலரோ மரணத்தை விட கடுமையான தண்டனையை கூட அனுபவிப்பார்கள். எனவே நம்முடைய பாவக்கணக்கு தீர நாம் சில பரிகாரங்களை செய்துதான் ஆக வேண்டும்.

தான தர்மங்கள்

தான தர்மங்கள்

ஏழைகள், உணவுக்காக ஏங்கும் பசியோடு இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்கள், ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள், வாயில்லா ஜீவன்கள் என்று அடுத்தவர்களுடைய உதவியை மட்டும் எதிர்பார்த்து வாழும் உயிர்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ, உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கக்கூடிய இயலாதவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும். அன்னதானம் செய்வது நமது பாவத்தின் ஒரு பகுதியை நீங்கச் செய்யும்.

 மீன்களுக்கு பொரி உணவு

மீன்களுக்கு பொரி உணவு

ஆலயத்தில் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொரிகளை உணவாக போடும் பழக்கத்தையும் நம்முடைய முன்னோர்கள் உண்டாக்கினார்கள், நாம் ஆலயம் சென்றதும் முகம் கால் கழுவிய பின்னர் பொரி வாங்கி மீன்களுக்கு நிறைய தூவி விடுவோம் எவ்வளவு மீனுக்கு நம் உணவு செல்கிறதோ அவ்வளவு பாவமும் விலகும், மிகச்சிறந்த பரிகாரத்தில் இதுவும் ஒன்று, எனவே இந்த பரிகாரத்தை மற்றவருக்கும் கூறி செய்யச் சொல்லுங்கள்.

பாவங்களைப் போக்கும் சக்தி

பாவங்களைப் போக்கும் சக்தி

மீன்களுக்கு பொரி போடுவதால் சிறு தோஷங்கள் நீங்கும். அதனால் தான் கோவில் குளங்களில் பொரி போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நாம் அறிந்து அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் போக்கும் சக்தி இந்த மீன்களுக்கு இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளனர்.

புறாக்களுக்கு உணவு

புறாக்களுக்கு உணவு


புறாக்களுக்கு உணவளிப்பது பூர்வ ஜென்ம சாபத்தை போக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. புறாக்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை, தனியா போன்ற தானியங்களை இரையாக வைப்பது நமக்கு நிறைய புண்ணியங்களை சேர்க்கும். எனவே உங்கள் வீடு தேடி வரும் புறாக்களுக்கு மறக்காமல் உணவு கொடுங்கள்.

எந்த நாளில் தர்மம் செய்யலாம்

எந்த நாளில் தர்மம் செய்யலாம்

தர்மம் செய்ய நாள் நட்சத்திரம் தேவையில்லை எனினும் ஏகாதசி தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் தர்மம் செய்ய நல்ல நாளாகும், அன்றாடம் தர்மம் செய்ய முடியாதவர்கள் அமாவாசை. பௌர்ணமி. ஜென்ம பிறந்த நட்சத்திரம் வரும் நாள். ஞாயிற்றுக்கிழமை. தமிழ் மாத பிறப்பு இந்த நாட்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தர்மம் செய்யுங்கள் நலம் உண்டாகும் .

சிவ வழிபாடு

சிவ வழிபாடு

தினமும் சிவ பெருமானுக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இது தெரியாமல் செய்த பாவத்திற்கான பரிகாரம்தான். தெரிந்தே பாவம் செய்தால் அதற்கான தண்டனையை சிறிதளவேனும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+