தமிழக அரசின் செம திட்டம்! கட்டணமே இல்லை.. அறுபடை வீடுகளுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் 207 பக்தர்கள்!
சென்னை: 60 வயதை எட்டியவர்களை முருகனின் அறுபடை வீடுகளுக்கு அரசு மானியத்தில் அழைத்துச் செல்லும் புதிய திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்று 207 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு இலவசமாக சுற்றுலா செல்கின்றனர்.
முருகன் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு வயதான பக்தர்கள் ஒரே தடவையில் சென்று தரிசிக்க சிரமப்படுகின்றனர். இவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் கட்டணம் இல்லாமல் அரசு சார்பில் அழைத்து செல்ல தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளுக்கான 6 கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 பேர் என ஆண்டுக்கு 5 முறை அழைத்து செல்லப்படுவர். வருடத்திற்கு 1,000 பக்தர்கள் என்ற கணக்கில் முதியவர்களை அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த முயற்சி இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டன. அதன்படி, விண்ணப்பித்த மூத்த குடிமக்களில், தகுதி உடைய 207 விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதன்படி முதற்கட்டமாக அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் ஜனவரி 28ஆம் தேதியான இன்று தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “60 வயதுக்கு மேற்பட்டவர்களை முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 207 பேர் முருகனின் அறுபடை வீடுகளுக்குச் செல்கின்றனர்.
அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா... தமிழக அரசு அதிரடி.. உற்சாகத்தில் முருக பக்தர்கள்
பக்தர்களின் பயண செலவை அரசு மானியத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது. தனிநபராக அறுபடை வீடுகளுக்குச் சென்று வர ரூ.50,000 வரை செலவாகும். தமிழக அரசு ஒரு நபருக்கு 15,830 ரூபாய் செலவு செய்கிறது. இந்த பயணச் செலவினை அரசு மானியமாக ஏற்றுக்கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications