Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளிக்கிழமை இந்த காரியங்களை செய்யாதீர்கள்..மீளவே முடியாத கடன் பிரச்சினை வரும் - ஆன்மீக ரகசியங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். ஆனால் சில காரியங்களை கண்டிப்பாக பெண்கள் செய்யக்கூடாது. வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருள்களை காலி செய்து விட்டு சுத்தமாக வைத்துக்கொண்டாலே, செல்வம் செழிக்கும் கடன் பிரச்சனைகள் விலகும்.

காலையில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழும் நபர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைக்கிறது. இவர்கள் சாதாரணமாக விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

பெண்கள் செய்யும் சில தவறுகள் கடன் பிரச்சினையை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் கடன் பிரச்சினை தீரவும் செல்வ வளம் அதிகரிக்கவும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கவும்.

ஒட்டடை அடிக்காதீர்கள்

ஒட்டடை அடிக்காதீர்கள்

வீட்டில் ஒட்டடை அதிகம் சேர விடக்கூடாது அப்படி இருந்தாலும் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படும்.
வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது. வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடித்தால் மகாலட்சுமியை விரட்டி அடிப்பதற்கு சமம் எனவே வியாழக்கிழமைகளில் ஒட்டடை அடித்து வீடு துடைப்பது நல்லது.

 துணி துவைக்காதீர்கள்

துணி துவைக்காதீர்கள்

பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகள் வீட்டில் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும். வியாழக்கிழமை அன்றே துணி துவைத்து விடுவது நல்லது. வெள்ளிக்கிழமை நாளில் மறந்தும் துணி துவைக்காதீர்கள். வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வது கூடாது.

கடன் பிரச்சினை

கடன் பிரச்சினை

வெள்ளிக்கிழமையன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். அதே நேரத்தில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது அது வறுமையை ஏற்படுத்தும் கடன் பிரச்சினையில் சிக்க வைத்து விடும். அதே போல ஆண்கள் முடி வெட்டவோ, முக சவரம் செய்யவோ கூடாது.

வெள்ளிக்கிழமை வாங்க வேண்டியவை

வெள்ளிக்கிழமை வாங்க வேண்டியவை

வெள்ளிக்கிழமையன்று கல் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி நிரப்பி வைக்கலாம். மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமை குறையும். வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது சிறப்பு. தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.

பூஜை அறையில் இருக்க வேண்டியவை

பூஜை அறையில் இருக்க வேண்டியவை

பசும்பால், வலம்புரி சங்கு, துளசி, தேன், செந்தாமரை, வெண்தாமரை ஆகியவை செல்வத்தை அதிகரிக்கச் செய்பவை. இவை நம்முடைய வீட்டிலிருந்தால் ஐஸ்வர்யம் பெருகும். கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றிச் சொல்லக் கூடிய மகத்துவம் வாய்ந்த ஸ்துதி. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை வீட்டிலுள்ள பெண்கள் தினமும் அதிகாலை அல்லது அந்திப்பொழுதில் படித்தாலோ, கேட்டாலோ அந்த வீட்டில் செல்வநிலை பெருகும்.

 வெள்ளிக்கிழமை விரதம்

வெள்ளிக்கிழமை விரதம்

வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கும், குபேரனுக்கு உரிய மிக உன்னதமான நாள். வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+