வெள்ளிக்கிழமை இந்த காரியங்களை செய்யாதீர்கள்..மீளவே முடியாத கடன் பிரச்சினை வரும் - ஆன்மீக ரகசியங்கள்
சென்னை: வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். ஆனால் சில காரியங்களை கண்டிப்பாக பெண்கள் செய்யக்கூடாது. வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருள்களை காலி செய்து விட்டு சுத்தமாக வைத்துக்கொண்டாலே, செல்வம் செழிக்கும் கடன் பிரச்சனைகள் விலகும்.
காலையில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழும் நபர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைக்கிறது. இவர்கள் சாதாரணமாக விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
பெண்கள் செய்யும் சில தவறுகள் கடன் பிரச்சினையை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் கடன் பிரச்சினை தீரவும் செல்வ வளம் அதிகரிக்கவும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கவும்.

ஒட்டடை அடிக்காதீர்கள்
வீட்டில் ஒட்டடை அதிகம் சேர விடக்கூடாது அப்படி இருந்தாலும் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படும்.
வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது. வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடித்தால் மகாலட்சுமியை விரட்டி அடிப்பதற்கு சமம் எனவே வியாழக்கிழமைகளில் ஒட்டடை அடித்து வீடு துடைப்பது நல்லது.

துணி துவைக்காதீர்கள்
பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகள் வீட்டில் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும். வியாழக்கிழமை அன்றே துணி துவைத்து விடுவது நல்லது. வெள்ளிக்கிழமை நாளில் மறந்தும் துணி துவைக்காதீர்கள். வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வது கூடாது.

கடன் பிரச்சினை
வெள்ளிக்கிழமையன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். அதே நேரத்தில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது அது வறுமையை ஏற்படுத்தும் கடன் பிரச்சினையில் சிக்க வைத்து விடும். அதே போல ஆண்கள் முடி வெட்டவோ, முக சவரம் செய்யவோ கூடாது.

வெள்ளிக்கிழமை வாங்க வேண்டியவை
வெள்ளிக்கிழமையன்று கல் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி நிரப்பி வைக்கலாம். மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமை குறையும். வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது சிறப்பு. தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.

பூஜை அறையில் இருக்க வேண்டியவை
பசும்பால், வலம்புரி சங்கு, துளசி, தேன், செந்தாமரை, வெண்தாமரை ஆகியவை செல்வத்தை அதிகரிக்கச் செய்பவை. இவை நம்முடைய வீட்டிலிருந்தால் ஐஸ்வர்யம் பெருகும். கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றிச் சொல்லக் கூடிய மகத்துவம் வாய்ந்த ஸ்துதி. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை வீட்டிலுள்ள பெண்கள் தினமும் அதிகாலை அல்லது அந்திப்பொழுதில் படித்தாலோ, கேட்டாலோ அந்த வீட்டில் செல்வநிலை பெருகும்.

வெள்ளிக்கிழமை விரதம்
வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கும், குபேரனுக்கு உரிய மிக உன்னதமான நாள். வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் பெறலாம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications